குழந்தையோடு வந்த மகளை அடித்து கொன்ற பெற்றோர்!திடுக்கிடும் தகவல்!

Published by
Sulai

ஆந்திரா மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தில் பாஸ்கர் நாயுடு வரலட்சுமி என்ற தம்பதியினர் வாழ்ந்து வந்தனர்.இவருக்கு ஹேமாவதி என்ற மகள் இருந்துள்ளார்.ஹேமாவதியை அவர் பெற்றோர் இருவரும் செல்லமாக வளர்த்துள்ளனர்.
திருமண வயது வந்தவுடன் ஹேமாவதிக்கு வேறு சாதியை சேர்ந்த கேசவலு மீது ஆசை ஏற்பட்டுள்ளது.கேசவலு தலித் சமூதாயத்தை சேர்ந்தவர் என்பதால் ஹேமாவதியின் பெற்றோர் அவர்களின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.
அந்நிலையில் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் ஊரை விட்டு ஓடி சென்று திருமணம் செய்து கொண்டனர்.மேலும் வெளியூரில் யாருக்கும் தெரியாமல் வசித்து வந்த இருவருக்கும் குழந்தை கரு உருவாகியுள்ளது.
குழந்தை பிறந்தவுடன் பெற்றோர் மனம் இறங்கிவிடுவார் என்றும் தமக்கு வளைகாப்பு செய்து வைப்பார் என்று ஹேமாவதி எண்ணியுள்ளார். இந்நிலையில் குழந்தை பிறக்கும் நாள் நெருங்கியுள்ளது.
ஹேமாவதியை பார்க்க ஆசைப்பட்ட அவரின் பெற்றோர் இருவரையும் சொந்த ஊருக்கு வரவழைத்துள்ளனர்.தங்களின் வீட்டில் இருந்த நிலையில் ஹேமாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
அப்போது ஹேமாவதி பிரசவத்திற்காக பலமனேரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.இந்த விஷயம் ஹேமாவதியின் பெற்றோருக்கு தெரியவந்தவுடன் தங்களை அசிங்கபடுத்திய இருவரையும் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்துள்ளனர்.
நேற்று மாலை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் வழியில் ஆட்டோவை திடீரென்று ஒரு கும்பல் வழிமறித்துள்ளது.அது யார் என்று ஹேமாவதி பார்த்த போது அவரின் தந்தையும் உறவினரும் நின்றுகொண்டிருந்துள்ளனர்.தம்மை அழைத்து செல்ல வந்துள்ளனர் என்று ஹேமாவதி நினைத்துள்ளார்.
ஆனால் அவர்கள் ஆட்டோவில் இருந்த இருவரையும் வெளியே இழுத்து போட்டு அடித்துள்ளனர்.பச்சை உடம்பு காரி என்று கூட மாறாமல் அடித்து கொன்று கால்வாயில் வீசி சென்றுள்ளனர்.பிஞ்சு குழந்தை என்று கூட பாராமல் வீசி எரிந்து சென்றுள்ளனர்.
காவல் துறையினருக்கு சம்பவத்தை நேரில் பார்த்த பொது மக்கள் தகவல் கொடுத்துள்ளனர்.இதை தொடர்ந்து விரைந்து வந்த காவல்துறையினர் குழந்தையை மீட்டு ஹேமாவதியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
இந்நிலையில் மகளுக்கு குழந்தை பிறந்தவுடன் பெற்றோர் அடித்து கொன்ற இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recent Posts

காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பிய தமிழக சுற்றுலா பயணிகள்.!

காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பிய தமிழக சுற்றுலா பயணிகள்.!

காஷ்மீர் மாநிலம் பெஹல்காமில் ஏப்ரல் 22ம் தேதி சுற்றுலா பயணிகள் மீதான தீவிரவாத தாக்குதலில் 26 கொல்லப்பட்டு, பலர் படுகாயம்…

25 minutes ago

என்னை கொலை பண்ணிருவேன்னு மிரட்டுறாங்க! போலீசில் புகார் கொடுத்த கவுதம் கம்பீர்!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் பகுதியில், பைசரன் புல்வெளியில் (Baisaran Meadow)…

55 minutes ago

Live : பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் முதல் அரசியல் நிகழ்வுகள் வரை!

சென்னை : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக இன்று (ஏப்ரல் 24, 2025) டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…

1 hour ago

பயங்கரவாத தாக்குதல்…மொத்தம் 5 தீவிரவாதிகள், 3 பாகிஸ்தானியர்? விசாரணையில் வந்த முக்கிய தகவல்!

பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட…

2 hours ago

மயோனைஸ் பிரியர்கள் ஷாக்… “ஓராண்டு தடை”! தமிழ்நாடு அரசு உத்தரவு!

சென்னை : பச்சை முட்டை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படுவது மயோனைஸ். இதனை மக்கள் சிக்கன் சாப்பிடுவதில் இருந்து…

3 hours ago

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்…தகுந்த பதிலடி அளிக்கப்படும்! ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!

பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் பிரபல சுற்றுலாத் தலமான பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம்…

3 hours ago