தங்கையிடம் பெற்றோர்கள் அதிக பாசம் ! ஆத்திரத்தில் 11 மாத தங்கையை கொன்ற 5 வயது அக்கா..!

Default Image

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் துர்கஷாசனம் கிராமத்தில் வசித்து வருபவர் காவியா. இவருக்கு ஹேமஸ்ரீ என்ற 11 மாத குழந்தையும் நிர்மலா என்ற 5 வயது பெண் குழந்தையும் உள்ளனர். மேலும் கவியாவிற்கு இரண்டாவது மகள் பிறந்த உடன் அவர் மீது பெற்றோர் அதிக பாசத்துடன் இருந்ததை கண்ட நிர்மலா கோபத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில் காவியா தனது 11 மாத குழந்தையை பக்கத்து வீட்டில் தூங்கவைத்துள்ளார், பிறகு சிறிது நேரம் கழித்து குழந்தையை காண சென்ற காவியா அங்கு குழந்தை இல்லை என்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து குழந்தை ஹேமஸ்ரீயை வீடு முழுவது தேடியுள்ளார்.
பல்வேறு இடங்களில் தேடியும் குழந்தைக்கிடைக்கவில்லை.

மேலும் குழந்தையின் சடலம் வீட்டின் மேல் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியிலிருந்து மீட்டனர். மேலும் இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் ஹேமாவின் தங்கை நிர்மலாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது தன் தங்கை பிறந்தது முதல் அவள் மீது பெற்றோர் அதிக பாசத்துடன் இருந்ததால் அது பிடிக்கவில்லை என்பதால் தனது தங்கையை தண்ணீர் தொட்டிக்குள் போட்டு விட்டேன் என்று அப்பாவியாக கூறியுள்ளார்.

மேலும் இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசார் சிறுமி நிர்மலாவின் மீது கொலை வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்