‘அமானுஷ்ய வீடு’.! கடவுளைச் சந்திப்பதற்காக ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் தற்கொலை.!

Default Image
  • டெல்லியில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் வீட்டில்  தூக்கில் தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
  • தற்போது அந்த அமானுஷிய வீட்டை வாங்கி மருத்துவ பரிசோதனை மையமாக மாற்றியுள்ளனர்.

டெல்லியின் வடக்குப் பகுதியில் உள்ள புராரியில் சகோதரர்கள் பவனேஷ், லலித் பாட்டியாவின் குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தங்கள் வீட்டில் கைகள், கால்கள், கண்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக தூக்கில் தொங்கினர். இந்த சம்பவம் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், விசாரணையில் தெரிய வந்தது, கடவுளைச் சந்திப்பதற்காகத்தான் தற்கொலை செய்து கொள்வதாக அவர்கள் எழுதிய டைரி குறிப்புகள் பல்வேறு அமானுஷ்ய கதைகளை உருவாக்கி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதனால் அந்த வீட்டில் சம்பவத்துக்கு அப்புறம் நீண்ட நாட்கள் யாரும் அங்கு போகவும் இல்லை, வீட்டை யாரும் வாங்கபவும் இல்லை. அந்த வீடு ஒரு பேய் வீடாக அனைவரும் குறி வந்தனர்.

தற்போது மோகன் சிங் என்ற மருத்துவர் அந்த அமானுஷிய வீட்டை வாங்கி மருத்துவ பரிசோதனை மையமாக மாற்றியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், தனக்கு பேய், பிசாசு போன்ற மூட நம்பிக்கை  எதுவும் இல்லை. இதனால் தான் வீட்டை வாங்கியதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்