பதியப்பட்டதா கிரினல் வழக்கு ? விஸ்வரூபம் எடுக்கும் மருத்து விவகாரம்!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறிய ராம்தேவ் மீது கிரிமினல் நடவடிக்கை கோரி பீகாரில் வழக்கு பதியப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பதஞ்சலி நிறுவனம் அண்மையில் ‘கொரோனில்’ மற்றும் ‘சுவாசரி’ என்னும் இரு மருந்துகளை வெளியிட்டு, கொரோனா நோய்த் தொற்றுக்கான ஆயுர்வேத மருந்து என தெரிவித்தது.கொரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து 100 சதவிகிதம் குணமடைய வைக்கும் ஆயுர்வேத மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக கூறியது பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம்.மேலும் இதுகுறித்து உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் செய்தியாளர்களைச் சந்தித்த பதஞ்சலி நிறுவனரான பாபா ராம்தேவ் கூறுகையில்:
திடீரென்று உத்தரவு அமைச்சகத்திடம் வந்ததை அடுத்து மூச்சி இரைக்க ட்விட்டருக்கு ஓடி வந்த அதன் தலைமை செயல் அதிகாரியான ஆச்சார்ய பாலகிருஷ்ணா எங்கள் மருந்து தொடர்பான அனைத்து தகவல்களையும் ஆயுஷ் அமைச்சகத்துக்கு அளித்துள்ளதாகவும், தகவல் தொடர்பு இடைவெளி தற்போது நிரப்பப்பட்டுள்ளதாகவும், ஆயுர்வேத மருத்துவத்துக்கு ஊக்கத்தையும் பெருமையையும் இந்த அரசு வழங்கியுள்ளது என்றும் டுவிட்டரில் தெரிவித்தார்.
இதற்கிடையில் இவர் இவ்வாறு தெரிவிக்க இதுகுறித்து ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலோ பதஞ்சலி நிறுவனத்தால் கூறப்பட்ட மருத்துவ ஆய்வுகள் குறித்த தகவல்கள் பற்றி அமைச்சகத்திற்கு எதுவும் தெரியவில்லை என்று கூறி மேலும் நழுவியது.மேலும் கொரோனாவை குணப்படுத்தும் எனக் கோரப்பட்ட மருந்தின் பெயர், கலவை, இந்த ஆய்வு நடத்தப்பட்ட இடங்கள், மருத்துவமனைகள், எத்தனை பேரிடம் பரிசோதிக்கப்பட்டன என்ற விவரங்கள், நிறுவன நெறிமுறை குழு அனுமதி, இந்திய மருத்துவ பரிசோதனைகள் பதிவின் அனுமதி, ஆய்வின் முடிவுகள் ஆகியவற்றை பதஞ்சலி நிறுவனம் உடனடியாக அதனை தெரிவிக்க வேண்டும் என்று ராம்தேவ் நிறுவனத்திற்கு ஆயுஷ் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் இது குறித்து மத்திய அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் கூறுகையில் மருந்தை வழங்கியிருப்பது ஒரு “நல்ல விஷயம்” ஆனால் அதற்கு அவரது ஆயுஷ் அமைச்சகத்தின் சரியான அனுமதி தேவை என்று கூறினார்.இந்நிலையில் தான் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறிய ராம்தேவ் மீது கிரிமினல் நடவடிக்கை கோரி பீகாரில் வழக்கு பதியப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!
December 19, 2024![chennai rains](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/chennai-rains-2.webp)
மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!
December 18, 2024![Mumbai Boat Accident](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Mumbai-Boat-Accident.webp)
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024![Lokesh Kanagaraj Production Mr Bhaarath Movie promo](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Lokesh-Kanagaraj-Production-Mr-Bhaarath-Movie-promo.webp)
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024![Union Minister Amit shah](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Union-Minister-Amit-shah-5.webp)