நேற்று விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட்டர் ரிஷப் பந்த்தின் உடைமைகள் திருடப்படவில்லை என போலிசார் தெரிவித்தனர்.
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் நேற்று அதிகாலை காரில் சென்று கொண்டிருந்த போது நெடுஞ்சாலையில் உள்ள டிவைடரில், கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த ரிஷப் பந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்திற்கு பிறகு ரிஷப் பந்த்தின் பணம் மற்றும் பிற உடைமைகள் திருடப்பட்டதாக வெளிவந்த தகவலை உத்தரகாண்ட் போலிசார் மறுத்துள்ளனர். அந்த செய்திகள் தவறானவை, அடிப்படை ஆதாரமற்றவை என்று உத்தரகாண்ட் காவல்துறை தெரிவித்துள்ளது.
பந்த்தின் பிளாட்டினம் செயின், தங்க கைசெயின் மற்றும் 4000 ரூபாய் பணம், அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக போலிசார் தெரிவித்தனர். டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் பந்த் அனுமதிக்கப்பட்டு அவர் தற்போது குணமடைந்து வருகிறார் என்று போலிசார் மேலும் கூறினர்.
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…