இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் ஹெலிகாப்டர்..!!

Default Image

ஜம்மு: இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ஹெலிகாப்டர் அத்துமீறி நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த ஹெலிகாப்டரை இந்திய பாதுகாப்பு படையினர் சுட்டதாகவும், ஆனால் இதில் ஹெலிகாப்டர் நிலை என்ன ஆனது என்பது குறித்து உறுதியான தகவல் ஏதுமில்லை.

சமீப காலமாக பாகிஸ்தான் படையினரின் அட்டூழியம் அதிகரித்து வருகிறது. புதிதாக இம்ரான்கான் பிரதமராக பொறுப்பேற்றதும் இரு நாடுகள் இடையே பேச்சு நடத்த ஆர்வப்படுவதாக கூறியிருந்தார். பேச்சு துவங்கவுள்ள நிலையில் எல்லையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் இந்திய வீரர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து பேச்சு ஆரம்ப கட்டத்திலேயே ரத்தானது.

நேற்று பாகிஸ்தான் படை மீது இந்தியா நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2வது ஆண்டு நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் இன்று ஜம்மு காஷ்மீர் எல்லையான பூஞ்ச் பகுதியில் மதியம் 12.10 மணியளவில் பாகிஸ்தான் ஹெலிகாப்டர் ஒன்று இந்திய வான் எல்லை பகுதிக்குள் நுழைந்தது. இதனை பார்த்த இந்திய படையினர் துப்பாக்கியால் சுட்டனர்

DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்