பாக்.புதிய பிரதமராக பதவியேற்ற ஷபாஸ் ஷெரீப் -வாழ்த்திய பிரதமர் மோடி!

Default Image

பாகிஸ்தானின் புதிய பிரதமராக நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷபாஸ் ஷெரீப் பதவியேற்றுக் கொண்டார்.

பாகிஸ்தானின் கடுமையான பொருளாதார வீழ்ச்சிக்கு அந்நாட்டின் பிரதமராக இருந்த இம்ரான்கான்தான் காரணம் என்று எதிர்க்கட்சிகள் நமிபிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன.

இதனைத் தொடர்ந்து,நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பிரதமர் பதவியை இம்ரான் கான்இழந்ததை தொடர்ந்து,புதிய பிரதமர் தேர்வு செய்யப்பட்டார்.பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் தேர்தலை இம்ரான்கான் கட்சியினர் அனைவரும் புறக்கணித்ததால் நவாஸ் ஷெரீப்பின் சகோதரரான ஷபாஸ் ஷெரீப் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில்,பாகிஸ்தானின் 23-வது பிரதமராக ஷபாஸ் ஷெரீப் பதவியேற்றுக் கொண்டார்.இதனால்,அவருக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக,பிரதமர் கூறுகையில்:”பாகிஸ்தானின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட எச்.இ.மியான் முஹம்மது ஷபாஸ் ஷெரீப் அவர்களுக்கு வாழ்த்துகள்.பயங்கரவாதம் இல்லாத பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிலத்தன்மையை இந்தியா விரும்புகிறது.இதன் மூலம் நமது வளர்ச்சி சவால்களில் கவனம் செலுத்தி,நமது மக்களின் நல்வாழ்வையும் செழிப்பையும் உறுதி செய்ய முடியும்”,என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 07042025
Rahul Gandhi
Edappadi Palanisamy - MK Stalin
R Ashwin
edappadi palaniswami sengottaiyan
TN BJP Leader Annamalai - BJP MLA Nainar Nagendran
UttarPradesh - Mosque