Pakistan [Image source : india news]
அரேபிய கடல் எல்லையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 200 இந்திய மீனவர்கள் மற்றும் மூன்று சிவில் கைதிகளை பாகிஸ்தான் இன்று விடுவிக்கும் என்று வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி அறிவித்துள்ளார். நல்லெண்ண நடவடிக்கையாக இந்திய மீனவர்களை விடுவிக்க பாகிஸ்தான் முடிவு செய்தது.
கடந்த மாதம், பாகிஸ்தான் அதிகாரிகள் கராச்சியில் சட்டவிரோதமாக மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்யப்பட்டு 198 இந்திய மீனவர்களை வாகா எல்லையில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எஞ்சிய தொகுதிகளை ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் விடுவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி தனது டிவிட்டர் பக்கத்தில், பாகிஸ்தான் 200 இந்திய மீனவர்களையும் 3 சிவிலியன் கைதிகளையும் இன்று விடுவிக்கிறது. முன்னதாக, 198 இந்திய மீனவர்கள் 12 மே 2023 அன்று திருப்பி அனுப்பப்பட்டனர் என்று குறியிட்டுள்ளார்.
பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளின் ஏழ்மையான மீனவர்கள் மற்ற நாட்டு எல்லைகளுக்குள் அடிக்கடி அத்துமீறி நுழைவதால், இரு நாட்டு கடல் பாதுகாப்புப் படைகளும் அவர்களை அடிக்கடி கைது செய்கின்றனர்.
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்றது. தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள்…
வாஷிங்டன் : அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனமான ஃபயர்ஃபிளை ஏரோஸ்பேஸின் ப்ளூ கோஸ்ட் மிஷன் 1 கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச்…
ஹைதராபாத் : தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் பின்னணிப் பாடகியாக வலம் வந்த கல்பனா அளவுக்கு அதிகமான…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்ரேலியா அணியை வீழ்த்தி…
சென்னை : பிரதீப் ரங்கநாதன் காட்டில் மழை தான் என்கிற வகையில், அவருடைய படங்கள் தொடர்ச்சியாக ஹிட் ஆகி கொண்டு வருகிறது.…
சென்னை : சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே புதிய வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், இதற்கு இடையிலான…