#49 இந்தியர்களை சிறைபிடித்தது பாக்…!

Default Image

பாகிஸ்தான் கடற்படையால் இந்திய மீனவர்கள் 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

குஜராத்தின் போர்பந்தர் பகுதியில் இருந்து 6 படகுகளிலும் கிர் சோம்நாத் பகுதியிலிருந்து 2 படகுகளிலும் கடலுக்குச் சென்ற 49 மீனவர்கள் கடல் எல்லையை தாண்டியதாக செப்டம்பர் 15-ம் தேதி பாகிஸ்தான் கடற்படையால் கைது செய்யப்பட்டனர் என்றும் அவர்களது 8 படகுகளையும் பாகிஸ்தான் கடற்படை பறிமுதல்  செய்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் மீனவர்கள் இந்திய கடல் எல்லையை தாண்டினால் அவர்களுக்கு ஜி.பி.எஸ். கருவி மூலம் இந்திய கடற்படையினர் எச்சரிக்கை விடுகின்றனர்.ஆனாலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றது.மேலும், மீனவர்களுக்கு தங்கள் படகுகளில் ஜி.பி.எஸ் கருவியை பொருத்த மாநில அரசு ரூ. 20 ஆயிரம் மானியம் வழங்கி வருகிறது.

குஜராத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள சுமார் 30 ஆயிரம் மீன்பிடி படகுகளில் 5 ஆயிரம் படகுகளில் ஜி.பி.எஸ் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil llive news
sneak her into boys hostel
Premalatha - Vijayakanth
TVKVijay - EPS
amit shah - mk stalin
stalin - eps
LSG vs GT - SRH vs PBKS