இந்தியா

நாக்பூர் கலவரம் : முக்கிய புள்ளியை தூக்கிய போலீசார்..யார் இந்த பாஹிம் கான் ? 

மகாராஷ்டிரா :  மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வெடித்த வன்முறையானது பெரிய அளவில் பேசுபொருளாக வெடித்திருக்கிறது. சாம்பாஜி நகரிலுள்ள அவுரங்கசீப் கல்லறையை அகற்றவேண்டுமென ஒருதரப்பினர் வலியுறுத்த, அவுரங்கசீப் கல்லறையை அகற்ற மற்றொரு தரப்பு எதிர்ப்பு தெரிவித்தால் வன்முறை வெடித்து மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தது. கடந்த மார்ச் (2025) 17-ஆம் தேதி  நாக்பூரில் நடந்த இந்த வன்முறை சம்பவங்களுக்குப் பிறகு இன்று நாக்பூர் அமைதிக்கு திரும்பியுள்ளது. திங்கட்கிழமை காலை விஎச்பி மற்றும் பஜ்ரங் தளம் நடத்திய […]

#Nagpur 6 Min Read
Nagpur Violence

மஞ்சள் நிற ரேஷன் கார்டு., குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000! புதுச்சேரி முதலமைச்சர் அறிவிப்பு! 

புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் மாநில நிதிநிலை அறிக்கை 2025 2026 சில தினங்களுக்கு முன்னர் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து உறுப்பினர்களின் பல்வேறு கோரிக்கைகள் கேட்கப்பட்டது. இன்று புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடரின் 7வது நாளில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பல்வேறு புதிய அறிவிப்புகளை அறிவித்தார். அதில், ரேஷன் பொருட்கள் வீடு தேடி பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் என்ற அறிவிப்பு, உப்புத்தண்ணீர் அதிகளவில் இருக்கும் கடற்கரையோர உப்பள பகுதி மக்களுக்கு தினமும் 20 லிட்டர் இலவச குடிநீர் […]

#Puducherry 3 Min Read
Puducherry CM Rangasamy

ரயில்வே தேர்வுக்கு தயாரான தேர்வர்கள்! RRB ஒட்டிய ‘ரத்து’ நோட்டீஸ்! 

டெல்லி : இன்று இந்திய ரயில்வே துறையின் சார்பாக காலியாக உள்ள 32,438 RRB லோகோ பைலட் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த தேர்வானது காலை மாலை என இரு ஷிப்டகளாக நடைபெற இருந்தது. இதற்காக தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டு இன்று காலை தேர்வு எழுத தேர்வர்கள் சென்று மையங்களுக்கு சென்றுவிட்டனர். ஆனால் இறுதி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நாடு முழுவதும் நடைபெற இருந்த லோகோ பைலட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக […]

INDIAN RAILWAYS 3 Min Read
RRB alp exam

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி: ராகுல்காந்தி எச்சரிக்கை!

டெல்லி : வாக்காளர் பட்டியல் மற்றும் போலி வாக்காளர் அடையாள அட்டைகளில் மோசடி தொடர்பாக காங்கிரஸ் உட்பட முழு எதிர்க்கட்சியும் தேர்தல் ஆணையத்தை குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் மோசடியை தடுக்கும் விதமாக, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து ஆலோசிக்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டம் வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது. அதன்படி, வாக்காளர் அடையாள அட்டைகளை ஆதாருடன் இணைக்கும் பணி தற்போதுள்ள […]

#RahulGandhi 6 Min Read
Aadhaar - Rahul Gandhi

“ஒட்டுமொத்த நாட்டுக்கே பெருமை” நாடாளுமன்றத்தில் பாராட்டு மழையில் இளையராஜா!

டெல்லி : இசைஞானி இளையராஜா இம்மாதம் (மார்ச்) 8ஆம் தேதியன்று லண்டனில் தனது முதல் சிம்பொனி இசையை அரங்கேற்றினார். 34 நாட்களில் வேலியன்ட் எனும் தனது முதல் சிம்பொனி இசையை குறிப்பெழுதி அதனை லண்டனில் புகழ்பெற்ற  ராயல் பில்ஹார்மானிக் ஆர்கெஸ்ட்ரா இசைக்குழுவுடன் இணைந்து தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றினார். இந்தியாவிலே முதல் நபராக சிம்பொனி இசையை அரங்கேற்றும் இசை கலைஞர் எனும் பெயர் பெற்றார் இசைஞானி இளையராஜா. சிம்பொனி இசையை அரங்கேற்றிய இளையராஜாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, […]

ILAIYARAJA 6 Min Read
Ilayaraja - Jagdeep dhankar

“கண்டிப்பா நீங்க வரணும்” சுனிதா வில்லியம்ஸிற்கு கடிதம் எழுதிய பிரதமர் மோடி!

டெல்லி :  9 மாதங்களுக்கு மேலாக விண்வெளியில் சிக்கியிருந்த  சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை  பத்திரமாக பூமிக்கு கொண்டு வருவதற்கு  நாசா உடன் இணைந்து எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் இணைந்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டது.  அதன்படி, கடந்த மார்ச் 14 அன்று இரவு 7 மணியளவில் அவர்கள் இருவரையும் மீட்க புளோரிடாவில் இருந்து க்ரூ டிராகன் விண்ணில் புறப்பட்டு சென்றது. அதில், அன் மெக்லெய்ன் (நாசா), நிக்கோல் ஏயர்ஸ் (நாசா), டாகுயா ஓனிஷி (ஜப்பான் […]

#Nasa 7 Min Read
sunita williams pm modi

“மகா கும்பமேளா., இந்தியாவின் பிரமாண்டத்தை உலகமே பார்த்தது!” பிரதமர் மோடி பெருமிதம்!

டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இராண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினர்களின் கேள்விகள் , அதற்கான துறை அமைச்சர்களின் பதில், மற்ற விவாதங்கள் ஆகியவை நடைபெற்று வருகின்றன. இதில் இன்று மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது, உத்திர பிரதேசம் பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளா நிகழ்வு பற்றி பெருமை பொங்க பேசினார். பிரதமர் பேசுகையில்,  பிரயாக்ராஜின் மகா கும்பமேளா பற்றி பேசுவதற்காக நான் இங்கு வந்துள்ளேன். மகா கும்பமேளா வெற்றிகரமாக […]

#Delhi 4 Min Read
PM Modi says about Maha Kumbh mela 2025

தொகுதி மறுசீரமைப்பு : “நாங்கள் தினமும் இதை செய்கிறோம்., ஏற்க மறுகிறாரக்ள்” கனிமொழி கண்டனம்!

டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் திமுக சார்பில் அதன் நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி எம்.பி, மக்களவை ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கினார்.  தொகுதி மறுசீரமைப்பு குறித்து அவையில் விவாதம் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார். ஆனால், திமுகவின் கோரிக்கையை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்க மறுத்துவிட்டார். இதனால் திமுக எம்பிக்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதுகுறித்து திமுக எம்பி கனிமொழி செய்தியாளர்களிடம் கூறுகையில், […]

#BJP 4 Min Read
DMK MP Kanimozhi

“பிற்படுத்தப்பட்டோருக்கு 42% இடஒதுக்கீடு”- தெலுங்கானா சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்.!

ஹைதிராபாத் : தெலுங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்புக்குப் பிறகு, பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு 42 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நேற்றைய தினம் அம்மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது 29 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், 2023 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் ஓபிசி பிரிவினருக்கு 42 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவதாக உறுதியளித்திருந்தது. இதன் […]

#Reservation 6 Min Read
telangana reservation

மகாராஷ்டிராவில் வெடித்த வன்முறை… வீடுகளை விட்டு வெளியே வர தடை!

நாக்பூர் : மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வன்முறை வெடித்துள்ள நிலையில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. நாக்பூரில் அவுரங்கசீப் சமாதிக்கு எதிரான போராட்டத்தின்போது வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது. சாம்பாஜி நகரிலுள்ள அவுரங்கசீப் கல்லறையை அகற்றவேண்டுமென ஒருதரப்பினர் வலியுறுத்த, அவுரங்கசீப் கல்லறையை அகற்ற மற்றொரு தரப்பு எதிர்ப்பு தெரிவித்தால் வன்முறை வெடித்ததாக கூறப்படுகிறது. இந்த வன்முறையில், வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டு எரிக்கப்பட்டன, கல் வீச்சு நிகழ்ந்தது மற்றும் ஒரு JCB இயந்திரமும் தீக்கிரையாக்கப்பட்டது. பெரும் […]

#Nagpur 3 Min Read
aurangzeb kabar in maharashtra

“இதெல்லாம் மறக்கவே முடியாது”..டொனால்ட் டிரம்ப்..ஒபாமா குறித்து பிரதமர் மோடி என்ன சொல்லிருக்காரு தெரியுமா?

டெல்லி : பிரதமர் மோடி அமெரிக்க விஞ்ஞானி லெக்ஸ் பிரிட்மெனின்  பாட்காஸ்டர் லெக்ஸ் ஃப்ரிட்மேனுடனான நேர்காணலில் கலந்து கொண்டபோது  பல விஷயங்களை பற்றி பேசினார். உதாரணமாக முன்னாள் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா குறித்தும் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் உடன் நடந்த சந்திப்பின் போது நடந்த சம்பவங்களை பற்றி நினைவு கூர்ந்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” நான் ஒருமுறை அமெரிக்காவின் ஹூஸ்டனுக்கு சென்றபோது டொனால்ட் டிரம்ப் உடன் சேர்ந்து “ஹவ்டி மோடி” என்கிற […]

Barack Obama 5 Min Read
pm modi

கிரிக்கெட்டில் எது சிறந்த அணி? இந்தியாவா? பாகிஸ்தானா? – பிரதமர் மோடி பதில்.!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க விஞ்ஞானி லெக்ஸ் பிரிட்மெனின்  பாட்காஸ்டர் லெக்ஸ் ஃப்ரிட்மேனுடனான நேர்காணலில், “இந்தியாவா? பாகிஸ்தானா? எது சிறந்த கிரிக்கெட் அணி?” என்ற கேள்விக்கு பிரதமர் மோடி நகைச்சுவையுடன் பதிலளித்தார். அவர் கூறியதாவது, “விளையாட்டின் தொழில்நுட்ப விவரங்களைப் பற்றி பேசும்போது, நான் ஒரு நிபுணர் இல்லை. அதில் நிபுணத்துவம் பெற்றவர்களால் மட்டுமே அதைத் தீர்மானிக்க முடியும். ஆனால் சில நேரங்களில் முடிவுகள் தாங்களாகவே பேசுகின்றன. சில நாட்களுக்கு முன்புதான் இந்தியா – பாகிஸ்தான் […]

#Pakistan 4 Min Read
india vs Pakistan - pm modi

தமிழ் படத்தை இந்தியில் ஏன் டப்பிங் செய்யுறீங்க? பரபரப்பை கிளப்பிய பவன் கல்யாண்..பிரகாஷ் ராஜ் பதிலடி!

ஆந்திரா : தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை என்பது பெரிய அளவில் பேசுபொருளாகியுள்ள நிலையில், தமிழகத்தின் சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலரும் ஹிந்தி திணிப்பு வேண்டாம் என எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள். இந்த சூழலில், தமிழ் திரைப்படங்களை இந்தியில் ஏன் டப்பிங் செய்ய வேண்டும்? என ஹிந்தி மொழிக்கு ஆதரவாக ஆந்திரா துணை முதல்வர் பவான் கல்யாண் பேசியது பேசுபொருளாக மாறியுள்ளது. பவன் கல்யாண், ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது, “தமிழ் திரைப்படங்களை இந்தியில் டப்பிங் செய்ய வேண்டிய […]

Pawan Kalyan 5 Min Read
prakash raj pawan kalyan

“ஹிந்தி தான் பேசுவேன்” அடம்பிடித்த பெண் ஊழியர்! மகாராஷ்டிராவில் வெடித்த மொழி சர்ச்சை!

மகாராஷ்டிரா :தென்னிந்தியாவில் ஏற்கனவே, மொழிப் போர் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசு  மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் மும்பையில் மராத்தி ஆட்சி மொழியாக இருந்தாலும் அனைத்து தரப்பு மக்களும் வசிப்பதால் அதிக அளவில் மராத்தி பேசப்படுவதில்லை. இந்தியே பிரதானமாக பேசப்படுகிறது. இப்படி இருக்கையில், மும்பையில் உள்ள ஏர்டெல் நிறுவனத்தில், மராத்தியில் பேசிய வாடிக்கையாளரிடம் இந்தியில் பதிலளித்துள்ளார் ஊழியர். இதனையடுத்து, மராத்தியில் பேசுமாறு கூறிய அவரிடம், ‘நான் ஏன் மராத்தியில் […]

#Maharashtra 5 Min Read
Airtel Employee Mumbai controversy

“தொகுதி மறுவரையறையை ஏற்க முடியாது” மு.க.ஸ்டாலினின் அழைப்பை ஏற்ற ரேவந்த் ரெட்டி.!

டெல்லி : தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக சென்னையில் வரும் 22 ஆம் தேதி திமுக சார்பில் ஆலோசனைக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவு பெரும் நோக்கில் திமுக பிரதிநிதிகள் குழு, ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன்பட்நாயக், ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தது. அதன் தொடர்ச்சியாக இன்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கும் நேரில் அழைப்பு விடுக்கப்பட்டது. அமைச்சர் கே.என்.நேரு, திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி உள்ளிட்டோர் டெல்லியில் சந்தித்து […]

#DMK 4 Min Read
DMK - Revanth Reddy

நதிகள், வடிகால்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய் எச்சரிக்கை! ICMR -ஆய்வில் வந்த அதிர்ச்சி தகவல்!

டெல்லி : இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (ICMR) இந்த ஆண்டு நடத்திய மருத்துவ ஆய்வில் நதிகள் மற்றும் திறந்த வடிகால்கள் அருகில் வாழும் மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த ஆய்வுக்கான விவரத்தை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் மூலம் மார்ச் 11, 2025 அன்று மாநிலங்களவையில் (Rajya Sabha) வெளியிடப்பட்டது.  இது குறித்து மத்திய அரசு என்னென்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது? ஆய்வில் என்னென்ன ஆபத்துகள் இருப்பது தெரியவந்தது […]

CANCER 6 Min Read
Cancer

“200 பிரமுகர்கள், மரியாதை அணிவகுப்பு”… மொரிஷியஸில் பிரதமர் மோடிக்கு பிரம்மாண்ட வரவேற்பு.!

போர்ட் லூயிஸ் : கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொரிஷியஸ் நாட்டில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக மொரிஷியஸ் சென்றடைந்த பிரதமர் மோடி, நாளை (மார்ச் 12 ஆம் தேதி) நடைபெறும் மொரீஷியஸின் 57வது தேசிய தினக் கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார். இந்தியப் பாதுகாப்புப் படைகளின் ஒரு குழுவும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளது. இந்நிலையில், இன்று அதிகாலை மொரீஷியஸ் சென்றடைந்த இந்திய பிரதமர் […]

Mauritius 5 Min Read
PM Modi Receives Grand Welcome In Mauritius

துப்பாக்கி முனையில் ‘பட்டப்பகல்’ நகை கொள்ளை! சுட்டுப்பிடித்த பீகார் போலீசார்!

பீகார் : இன்று  பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட பகுதியில் உள்ள பிரபல நகை கடையில் புகுந்த கொள்ளையர்கள் துப்பாக்கி காட்டி பணியாளர்களை மிரட்டி கோடி கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர நகைகளை கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அர்ரா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பிரபல தனியார் நகைக்கடை கோபாலி சௌக் கிளையில் இன்று காலை 10 மணியளவில் துப்பாக்கிகளுடன் ஒரு […]

#Bihar 6 Min Read
Bihar jewelry store robbery

“திமுக எம்.பி.க்கள் நாகரிகமற்றவர்கள்”… பேசிவிட்டு பின் வாங்கிய தர்மேந்திர பிரதான்!

டெல்லி :  இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில் கலந்து கொண்டு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்  பேசியது அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காகவும் மாறியுள்ளது. அவர் திமுக குறித்து பேசிய விஷயம் அக்கட்சியை சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவிக்க காரணமாகவும் அமைந்துள்ளது.  கூட்டத்தொடரில் திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் பேசும்போது புதிய கல்விக் கொள்கையை பின்பற்றாததால் தமிழகத்தை மத்திய அரசு பழிவாங்குகிறது என பேசியிருந்தார். […]

#DMK 8 Min Read
dharmendra pradhan Kanimozhi

திமுக மாணவர்களின் எதிர்காலத்தை நாசமாக்குகிறார்கள்! பதிலடி கொடுத்த தர்மேந்திர பிரதான்!

டெல்லி : மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் தமிழ்நாட்டுக்கு நிதி கொடுக்கப்படும்  என கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், தமிழகத்தை ஆளும் திமுக கட்சி இது இந்தி திணிப்பு என கண்டனங்களை தெரிவிக்க தொடங்கிவிட்டார்கள். இன்னும் இந்த விவகாரம் முடிவு பெறாமல் இருக்கும் சூழலில், கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடைபெறவுள்ளது. இந்த சூழலில், இன்று டெல்லி நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு தொடங்கியது. […]

#DMK 6 Min Read
Dharmendra Pradhan