டெல்லி : நடந்து முடிந்த டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 48 தொகுதிகளை கைப்பற்றி 27 வருடங்களுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. பிப்ரவரி 8ஆம் தேதியே ரிசல்ட் வெளியாகி இருந்தாலும், இன்று வரை அம்மாநில முதலமைச்சர் யார் என்பது தெரியாமல் இருந்தது. பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்கள் முடிந்த பிறகு இதற்கான ஆலோசனை இருக்கும் என கூறப்பட்டிருந்தது. அதேபோல, இன்று டெல்லியில் உள்ள பிரதமர் மோடி இல்லத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் […]
கர்நாடகா : அரை மணி நேர விளம்பரத்தைக் காட்டி தனது பொன்னான நேரத்தை வீணடித்ததற்காக பெங்களூரில் வசிக்கும் ஒருவர் PVR-INOX மீது வழக்குத் தொடர்ந்தார். புகார்தாரர் வழக்கில் வெற்றி பெற்றார், PVR-INOX நிறுவனம் இழப்பீடு செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட் டுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த 30 வயது நபர் ஒருவர், பிவிஆர் சினிமாஸ், ஐநாக்ஸ் மீது, படம் திரையிடப்படுவதற்கு முன்பு நீண்ட விளம்பரங்களை ஒளிபரப்பி 25 நிமிட நேரத்தை வீணடித்ததாகவும், அதனால் மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் வழக்குத் […]
டெல்லி : கடந்த 2013 (48 நாட்கள்), 2015, 2020 முதல் 2025 வரை டெல்லி மாநிலத்தில் ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி கட்சியை வீழ்த்தி 2025 சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி வாகை சூடியுள்ளது. 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக டெல்லியில் ஆட்சி அமைக்க உள்ளது. கடந்த பிப்ரவரி 8ஆம் தேதியே தேர்தல் முடிவுகள் வெளியானாலும் இன்னும் முதலமைச்சர் யார் என்ற அறிவிப்பை பாஜக தலைமை வெளியிடவில்லை. அதற்கான ஆலோசனை கூட்டம் டெல்லியில் உள்ள பிரதமர் […]
ஆந்திரா : முன்னாள் ஆந்திர முதல்வரும், YSR Congress Party தலைவருமான ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி இப்போது ஆட்சியில் இல்லை என்றாலும் கூட அவருக்கு மக்கள் கொடுக்கும் ஆதரவு உள்ளத்தில் இருந்து வருவது என்பதை பலமுறை பார்த்திருக்கிறோம். குறிப்பாக அவர் எதாவது வெளி இடங்களுக்கு சென்றால் கூட அவர் வருவதை அறிந்து மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுப்பார்கள். அப்படி தான் நேற்று அவரது கட்சியின் முக்கிய நிர்வாகியான வல்லபனேனி வம்சியை சந்திக்க விஜயவாடா சென்றிருந்தார். அப்போது […]
டெல்லி : புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பொறுப்பேற்றுக் கொண்டார். தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த ராஜுவ்குமார் நேற்றுடன் பணி நிறைவு செய்தார். இந்த நிலையில், டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் தேர்தல் ஆணையர் சுக்பீர் சிங் சந்து அவரை வரவேற்றார். ஞானேஷ்குமாரின் நியமனத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனிடையே, தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று நடக்க உள்ளது […]
டெல்லி : இந்திய தலைமை தேர்தல் ஆணையராக இருந்த ராஜேஷ் குமார் இன்று (பிப்ரவரி 18) பதவி ஓய்வு பெறுகிறார். இதனை அடுத்து புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்திய தேர்தல் ஆணையத்தின் 26வது தலைமை தேர்தல் அதிகாரி ஆவார். இவர் தேர்தல் ஆணையராக பணியாற்றி வந்த நிலையில் தற்போது புதிய தேர்தல் ஆணையராக விவேக் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு திடீரென தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமாரை மத்திய […]
பிரயாக்ராஜ் : உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் அளவுக்கதிகமான “Faecal Coliform” பாக்டீரியா கலந்திருப்பதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. Faecal Coliform என்பது மனிதர்கள், விலங்குகளின் மலக் குடல் பாதையில் உருவாகும் பாக்டீரியாக்கள் ஆகும். இந்த தண்ணீரில் குளித்தால் அல்லது குடித்தால் வயிற்றுப்போக்கு, டைபாய்டு காய்ச்சல், ஹெபடைடிஸ் A உள்ளிட்ட கொடிய நோய்கள் வர வாய்ப்புள்ளது. இவை அதிகளவில் இருக்கும் ஆற்றில் நாட்டின் குடியரசுத் தலைவர், […]
டெல்லி : அமெரிக்காவில் பிரதமர் மோடி, எலான் மஸ்க் இடையே சந்திப்பு நடைபெற்றிருந்த நிலையில், டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் புதிதாக ஊழியர்களை பணியமர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது. எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் தனது LINKEDIN பக்கத்தில் இந்தியாவில் வாடிக்கையாளர் மற்றும் பேக்-எண்ட் குழு என 13 வெவ்வேறு பணிகளுக்கு ஆட்களை தேடுவதாகப் பதிவிட்டுள்ளது. டெஸ்லாவின் இந்த நடவடிக்கை இந்திய சந்தையில் அதன் நுழைவைக் குறிக்கிறது. STARLINK சேவைக்காகப் பெங்களூரில் அலுவலகம் துவங்கப்பட்ட நிலையில், டெஸ்லா செயல்பாடுகளை மும்பை […]
மாசசூசெட்ஸ் : ஹார்வர்ட் இந்தியா மாநாடு பிப்ரவரி 18-ஆம் தேதி ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்திய அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், விண்ணப்பகர்கள், மற்றும் பல்வேறு துறைகளின் தலைவர்களும் பங்கேற்று இந்தியாவின் வளர்ச்சிகள் குறித்தும் வளர்ச்சிக்கு என்ன தேவை என்பது பற்றியும் பேசுவார்கள். அப்படி தான் இந்த முறை ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் தலைவர் நீதா அம்பானி கலந்து கொண்டு பேசியதோடு நகைச்சுவையாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். மாநாட்டில் கேள்வி-பதில் அமர்வில், ஒருவர் நீதா அம்பானியிடம் இந்திய பிரதமர் […]
டெல்லி : கடந்த சனிக்கிழைமை வாரணாசியில் காசி தமிழ் சங்கமத்தின் மூன்றாவது பகுதி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்,“ புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழக கல்வித்துறைக்கு நிதி தர இயலாது. தமிழ்நாடு அரசு, அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டால் நிதி விடுவிக்கப்படும்” என்று கூறியிருந்தார். இந்நிலையில், மும்மொழிக் கொள்கையை பிறமாநிலங்கள் ஏற்கும் போது தமிழ்நாடு மட்டும் ஏற்க மறுப்பது ஏன்? என அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது பெரிய […]
பீகார் : தலைநகர் டெல்லி மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, பீகார் மாநிலம் சிவான் பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. சிவான் பகுதியில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவாகியுள்ளது. அதே போல், வடகிழக்கு மாநிலமான சிக்கிமிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.. சிக்கிமின் லாச்சுங் பள்ளத்தாக்கில் காலை 8.13 மணிக்கு 5 கி.மீ ஆழத்தில் க்டர் அளவில் 2.3 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட […]
பஞ்சாப் : அமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழைந்து, |அங்கிருந்து வெளியேற்றப்பட்ட 112 இந்தியர்களுடன் மூன்றாவது விமானம், பஞ்சாபின் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் நேற்றிரவு தரையிறங்கியது. அமெரிக்க விமானப்படையின் C-17 A குளோப்மாஸ்டர் விமானத்தில் 112 பேர் வந்துள்ளனர். இவர்களில் 44 பேர் ஹரியானா, 33 பேர் குஜராத் மற்றும் 31 பேர் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள். விமான நிலையத்தில் இருந்து தங்கள் மாநிலத்தவர்களை வால்வோ பேருந்தில் ஹரியானா பாஜக அரசு, அழைத்துச் சென்றுள்ளது. முன்னதாக, 119 இந்தியர்கள் கொண்ட […]
டெல்லி : நியூடெல்லியில் 4.0 ரிக்டர் அளவுகோலில் இன்று அதிகாலை 5:36 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். அதிகாலை நேரமாக இருந்ததால், பெரும்பாலான மக்கள் உறங்கிக்கொண்டிருந்தனர். பின் திடீரென நிலநடுக்கத்தின் அதிர்வுகளை உணர்ந்த சிலர் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர். சில பகுதிகளில் கட்டிடங்கள் அதிர்ந்ததாகவும் , குறைந்த அளவில் அதிர்வுகளை உணர்ந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலநடுக்கம் டெல்லியை சுற்றியுள்ள நொய்டா, குர்கான் மற்றும் பல புறநகரப் பகுதிகளில் உணரப்பட்டது […]
டெல்லி : டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று, 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில், டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு 10 நாட்கள் கடந்த நிலையில், பாஜக தலைமையகம் முதலமைச்சர் பதவிக்கான முடிவை இன்னும் அறிவிக்கவில்லை. இன்னும் அறிவிக்கப்படாமல் இருப்பதற்கான காரணமே பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டு பயணத்தில் இருந்ததால் தான். இப்போது, பிரதமர் மோடி சுற்று பயணங்களை முடித்துவிட்டு இந்தியா திரும்பியுள்ள நிலையில், பாஜக மேலிடம் விரைவில் முதலமைச்சர் […]
டெல்லி : இன்று அதிகாலை 5:36 மணி அளவில் நியூடெல்லியில் 4.0 ரிக்டர் அளவுகோலில் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது. தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் (National Center for Seismology – NCS) இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலநடுக்கம் டெல்லியை சுற்றியுள்ள நொய்டா, குர்கான் மற்றும் பல புறநகரப் பகுதிகளில் உணரப்பட்டது. அதிகாலை நேரமாக இருந்ததால், பெரும்பாலான மக்கள் உறங்கிக்கொண்டிருந்தனர். பின் திடீரென நிலநடுக்கத்தின் அதிர்வுகளை உணர்ந்த சிலர் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர். […]
டெல்லி : நேற்று (பிப்ரவரி 15) இரவு புது டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 18 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் 3 குழந்தைகள் மற்றும் 11 பெண்கள்அடங்குவார்கள். இந்த நெரிசலில் சிக்கி இறந்தவர்கள் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவுக்கு சென்றவர்கள் என முதற்கட்டமாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கு மாற்றாக இயக்கப்பட்ட சிறப்பு ரயிலில் ஏற முயன்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக தெரிகிறது. இந்த நிகழ்வை […]
உத்தரப் பிரதேசம்: வாரணாசியில் இன்று காசி தமிழ் சங்கமத்தின் மூன்றாவது பகுதி நடைபெற்றது. இதில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் கலந்த கொண்டனர். அப்பொழுது, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் தமிழகத்திற்கு வர வேண்டிய கல்வி நிதி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த தர்மேந்திர பிரதான், “நிதி நிலுவையில் இருப்பது எனக்கு நன்றாகவே […]
பிரயாக்ராஜ் : உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவுக்குச் சென்ற பக்தர்களின் பொலேரோ விபத்துக்குள்ளானது. ஒரு பொலேரோவும் பேருந்தும் மோதியதில் 10 பக்தர்கள் உயிரிழந்தனர், 19 பக்தர்கள் காயமடைந்துள்ளனர். தற்போது, காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலின்படி, நேற்று இரவு மேஜாவில் உள்ள பிரயாக்ராஜ்-மிர்சாபூர் நெடுஞ்சாலையில் ஒரு பயங்கரமான சாலை விபத்து நடந்தது. பக்தர்கள் நிரம்பிய ஒரு பொலேரோவும் ஒரு பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் பொலேரோவில் பயணம் செய்த 10 பக்தர்களும் சம்பவ இடத்திலேயே […]
புதுச்சேரி : புதுச்சேரி – கடலூர் சாலையில் தவளக்குப்பம் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயிலும் சிறுமி, தனக்கு உடல்நிலை சரியில்லை என பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து, அச்சிறுமியை மருத்துவரிடம் அழைத்து சென்ற பிறகே சிறுமி பாலியல் சீண்டலுக்கு உள்ளாகி இருப்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, அப்பகுதி ஊர்மக்கள் நேற்று (பிப்ரவரி 14) மாலை திரளாக தனியார் பள்ளிக்கு சென்று அந்த குறிப்பிட்ட ஆசிரியருக்கு தர்ம அடி கொடுத்தனர். மேலும், […]
பஞ்சாப் : அமெரிக்காவில் சட்டவிரோத இந்திய குடியேறிகள் பஞ்சாபில் தரையிறங்குவது தொடர்பான அமெரிக்க இராணுவத் திட்டம் குறித்து பஞ்சாப் அரசியல் வட்டாரங்களில் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 119 இந்திய குடியேறிகளை ஏற்றிச் செல்லும் இரண்டு விமானங்கள் பிப்ரவரி 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள குரு ராம் தாஸ் சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு தகவல்களின்படி, 119 இந்திய குடியேறிகளில் பஞ்சாபிலிருந்து 67 […]