கடும் எதிர்ப்புகளுக்கு இடையே பத்மாவத் திரைப்டம் வசூலில் சாதனை படைத்துள்ளது .
சஞ்சய் லீலா பன்சாலி தயாரிப்பில் தீபிகா படுகோன், ரன்வீர் சிங், சாகித் கபூர் ஆகியோர் நடித்த இந்தப் படத்தைத் திரையிடுவதற்கு ராஜ்புத் அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.
ஒருசில மாநிலங்கள் படத்தைத் திரையிட விதித்த தடைகளை உச்சநீதிமன்றம் நீக்கியதுடன் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி பத்மாவத் படம் திரையிடப்பட்டது. திரையிட்ட முதல் நாளில் 19கோடி ரூபாயும், இரண்டாவது நாளில் 32கோடி ரூபாயும் மூன்றாவது நாளில் 27கோடி ரூபாயும் ஈட்டியுள்ளது. நான்காம் நாளான ஞாயிற்றுக் கிழமையுடன் மொத்த வசூல் 110கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது.
இத்தனைக்கும் குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் காரணமாகப் பெரும்பாலான திரையரங்கங்களில் பத்மாவத் திரையிடப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் ….
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…