ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுப்பு

Default Image

ஐஎன்எக்ஸ் வழக்கில் சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டது டெல்லி உயர்நீதிமன்றம்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில்  அமலாக்கத்துறை முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தை  கைது செய்தது.பின் சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.இதனிடையில் உடல்நலக்குறைவால் ப.சிதம்பரம் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.தொடர்ந்து அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு வருகிறது.
இந்தநிலையில் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில், அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக இடைக்கால ஜாமீன் கோரி, ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் .உடல்நிலையை கருத்தில் கொண்டு இடைக்கால ஜாமீன் வழங்குமாறு ப.சிதம்பரம் கோரிக்கை விடுக்கப்பட்டது.ஆனால் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன்  வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டது டெல்லி உயர்நீதிமன்றம்.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்