ஆந்திரா மாநிலத்தில் உள்ள திருப்பதி அரசு மருத்துவமனையில் 5 நிமிடம் ஆக்சிஜன் சப்ளை செய்வதற்கு தாமதமானதால் ஐசியூவில் இருந்த 11 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படும் நிலையில், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். இந்நிலையில், கொரோனாவால் இறப்பவர்களை விட ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. பல்வேறு மாநில அரசுகளும் தங்கள் மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் முறையாக கொடுக்க முடியாமல் திணறி வருகிறது.
இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி அரசு மருத்துவமனையில் நேற்று ஆக்சிஜன் சப்ளை செய்வதற்கு 5 நிமிடம் தாமதமாகி உள்ளது. இந்த ஐந்து நிமிட தாமதத்தில் ஐசியூவில் இருந்த கொரோனா நோயாளிகள் 11 பேர் மூச்சுத்தணறி உயிரிழந்துள்ளனர். இது குறித்து அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளதுடன் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…