ஆக்சிஜன் பற்றாக்குறை – மத்திய பிரதேச அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 12 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு!

Published by
Rebekal

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை காரணமாக கடந்த 25 மணி நேரத்தில் மட்டும் 12 நோயாளிகள் உயிரிழந்துள்ளனராம்.

கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த சில வாரங்களாக இந்தியா முழுவதிலும் தனது வீரியத்தை அதிகரித்து வரும் நிலையில், தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் திடீரென கொரோனா வைரஸின் வீரியம் மீண்டும் அதிகரித்ததால் பல்வேறு மாநில அரசுகள் தங்களது மருத்துவமனையில் சிகிச்சை பெறும்  நோயாளிகளுக்கு தேவையான படுக்கை வசதிகள் மற்றும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு திணறி வருகிறது.

இந்நிலையில் பல்வேறு பணம் படைத்த தொழிலதிபர்கள் இதற்காக உதவி வந்தாலும், பல மாநிலங்களில் ஆக்சிஜன் மற்றும் படுக்கை வசதிகள் குறைவாகவே உள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஷடோல் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 25 மணி நேரத்தில் மட்டும் ஆக்சிஜன் சப்ளை பற்றாக்குறை காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் உறவினர்கள் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாகத்தான் தங்கள் உறவினர்கள் உயிரிழந்துள்ளதாக கூறினாலும், மருத்துவமனை நிர்வாகம் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது. மேலும் அவர்கள் மிக மோசமான சூழ்நிலையில் இருந்த நோயாளிகள் தான் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

Published by
Rebekal

Recent Posts

நடராஜனுக்கு வாய்ப்பு கொடுக்காதது ஏன்? மனம் திறந்த கெவின் பீட்டர்சன்!

நடராஜனுக்கு வாய்ப்பு கொடுக்காதது ஏன்? மனம் திறந்த கெவின் பீட்டர்சன்!

டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் ரசிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று என்னவென்றால்,…

47 minutes ago

“நாம் நமக்குள் சண்டையிடாமல் ஒற்றுமையாக இருப்போம்!” அஜித்குமார் வேண்டுகோள்!

டெல்லி : நடிப்பு , கார் பந்தயம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கி மத்திய…

1 hour ago

கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!

ஒட்டாவா : 343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அமெரிக்காவை போலவே கனடாவிலும் தேர்தல் வாக்கெடுப்பு…

1 hour ago

2026ல் அதிமுகவுக்கு 6 இடங்கள் கூட கிடைக்காது -ஆர்.எஸ்.பாரதி காட்டம்!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது…

1 hour ago

சீனா: உணவகத்தில் பயங்கர தீ விபத்து…22 பேர் பலி!

லியோனிங் : ஏப்ரல் 29 அன்று, சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள லியோயாங் நகரின் பைடா மாவட்டத்தில் (Baita District)…

2 hours ago

பஹல்காம் தாக்குதல் : உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.50 லட்சம்…மஹாராஷ்டிரா முதல்வர் அறிவிப்பு!

காஷ்மீர் : மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…

2 hours ago