ஆக்ஸிஜன் தொட்டியில் உள்ள வால்வில் பழுது காரணமாக ஆக்ஸிஜன் கசிவு ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர்.
பல மாநிலத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ள நிலையில், மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் பல நோயாளிகள் மற்ற மருத்துவமனைகளுக்கு மாற்றப்படுகிறார்கள். இதற்கிடையில், மஹாராஷ்டிராவில் நாசிக்கில் உள்ள ஜாகிர் உசேன் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தொட்டியில் உள்ள வால்வில் பழுது காரணமாக ஆக்ஸிஜன் லீக்கானது.
இந்த சம்பவத்தில் 11 பேர் இறந்ததாக அதிர்ச்சி தகவல் சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப் அளித்துள்ளார். ஜாகிர் உசேன் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தொட்டி ஆக்ஸிஜன் கசிந்ததால் ஆயிரக்கணக்கான லிட்டர் ஆக்ஸிஜன் வீணானது. ஜாகிர் உசேன் மருத்துவமனை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறது. தற்போது 131 நோயாளிகள் உள்ளனர்.
அவர்களில் நான்கு முதல் ஐந்து பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. மற்றவர்கள் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறார்கள். ஆக்ஸிஜன் தொட்டியில் இருந்து கசிவு ஏற்படுவதைத் தடுக்க மருத்துவமனை நிர்வாகத்தால் பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…