ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை – டெல்லி மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்படும் நோயாளிகள்!

Published by
Rebekal

ஒரு நாள் முழுவதற்கும் தேவையான அளவிற்கு மேல் ஆக்சிஜன் இருப்பதாக டெல்லி மருத்துவமனைகளில் மீண்டும் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக நாளுக்கு நாள் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு கொண்டிருந்தாலும், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து கொண்டிருக்கின்றனர். கொரோனா தாக்கத்தால் உயிரிழப்பவர்கள் ஒருபுறமிருக்க நோயாளிகள் மருத்துவமனையில் படுக்கையறை வசதி மற்றும் ஆக்சிஜன் வசதி இல்லாததால் சிகிச்சை பெற முடியாமல் இறந்துவிடுகின்றனர். பல மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கொடுக்க முடியாமல் நோயாளிகள் உயிரிழந்த சூழ்நிலை ஏற்பட்டது. குறிப்பாக டெல்லியில் இந்த நிலை அதிகமாக இருந்தது.

இதனை அடுத்து டெல்லியில் உள்ள பல மருத்துவமனைகள் தங்கள் மருத்துவமனைகளில் நோயாளிகளை அனுமதிப்பதற்கு மறுத்து வந்த நிலையில், தற்போது ஒரு நாள் முழுவதற்கும் தேவையான அளவிற்கு மேல் டெல்லி மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பதால் மீண்டும் நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட துவங்கியுள்ளனர். இது குறித்து தெரிவித்துள்ள ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் டாக்டர் டி கே பாலுஜா அவர்கள், தற்போது ஒரு நாளுக்கு தேவையான அளவுக்கு அதிகமாக ஆக்சிஜன் சப்ளை தங்களிடம் இருப்பதாக கூறியுள்ளார்.

தினசரி தங்களுக்கு 3.6 மெட்ரிக் டன் அளவில் ஆக்ஸிஜன் தேவைப்படும், ஆனால் தற்பொழுது ஆறு டன் தங்களிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தங்களுக்கு ஆக்சிஜன் வழங்கிய இந்திய ரயில்வே மற்றும் டெல்லி அரசுக்கு தங்கள் மருத்துவமனை சார்பில் நன்றியும் தெரிவித்துள்ளார். மேலும் ஒரே இரவில் தங்களுக்கு இந்தியன் ரயில்வே மூலமாக தங்களுக்கு ஆக்சிஜன் வழங்கிய டெல்லி முதல்வருக்கும் தங்கள் நன்றி என தெரிவித்துள்ளார். இந்த மருத்துவமனையில் மட்டுமல்லாமல் பாத்ரா மருத்துவமனை, சர் கங்கா ராம் மருத்துவமனை உள்ளிட்ட பல மருத்துவமனைகளில் தற்பொழுது ஆக்சிஜன் போதிய அளவு இருப்பதாகவும் எனவே நோயாளிகளை அனுமதித்த தாங்கள் தயாராக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகிகள் மற்றும் இயக்குனர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Published by
Rebekal

Recent Posts

சிம்பு படமா? அப்போ 13 கோடி கொடுங்க…தயாரிப்பாளரிடம் கண்டிஷன் போட்ட சந்தானம்!

சிம்பு படமா? அப்போ 13 கோடி கொடுங்க…தயாரிப்பாளரிடம் கண்டிஷன் போட்ட சந்தானம்!

சென்னை : நடிகர் சந்தானம் தொடர்ச்சியாகவே ஹீரோவாகவே படங்களில் நடித்து வரும் நிலையில் மீண்டும் காமெடியனாக அவரை பார்க்க மாட்டோமா…

1 minute ago

“பொறுமைக்கும் எல்லை உண்டு.., வரம்பு மீறி போறீங்க.!” சேகர்பாபு மீது அண்ணாமலை கடும் விமர்சனம்!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் கூட்டத்தொடரில் சுற்றுலாத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம்…

10 minutes ago

அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சியா? கேள்விக்கு நயினார் நாகேந்திரன் கொடுத்த ரியாக்சன்!

சென்னை : அதிமுக – பாஜக வருகின்ற 2026 சட்டமன்றத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து ஆட்சியில் பங்கு அதிகாரத்தில்…

47 minutes ago

அதிமுக – பாஜக : “கூட்டணி தான் ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை” – தம்பிதுரை பரபரப்பு விளக்கம்!

சென்னை : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற குரல் தற்போது தமிழக அரசியலில் மிக அதிகமாக ஒலித்து கொண்டிருக்கின்றன.…

1 hour ago

இபிஎஸ் பதில் தான் என்னோட பதில்! செய்தியாளர் கேட்ட கேள்விக்கு டென்ஷனான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்துள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்திருந்தார். இந்த…

1 hour ago

என்னை பற்றி தெரிஞ்சும் ராஜஸ்தான் செஞ்சது ஆச்சரியம்! மிட்செல் ஸ்டார்க் பேச்சு!

டெல்லி : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது.…

2 hours ago