ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை – டெல்லி மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்படும் நோயாளிகள்!

Published by
Rebekal

ஒரு நாள் முழுவதற்கும் தேவையான அளவிற்கு மேல் ஆக்சிஜன் இருப்பதாக டெல்லி மருத்துவமனைகளில் மீண்டும் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக நாளுக்கு நாள் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு கொண்டிருந்தாலும், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து கொண்டிருக்கின்றனர். கொரோனா தாக்கத்தால் உயிரிழப்பவர்கள் ஒருபுறமிருக்க நோயாளிகள் மருத்துவமனையில் படுக்கையறை வசதி மற்றும் ஆக்சிஜன் வசதி இல்லாததால் சிகிச்சை பெற முடியாமல் இறந்துவிடுகின்றனர். பல மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கொடுக்க முடியாமல் நோயாளிகள் உயிரிழந்த சூழ்நிலை ஏற்பட்டது. குறிப்பாக டெல்லியில் இந்த நிலை அதிகமாக இருந்தது.

இதனை அடுத்து டெல்லியில் உள்ள பல மருத்துவமனைகள் தங்கள் மருத்துவமனைகளில் நோயாளிகளை அனுமதிப்பதற்கு மறுத்து வந்த நிலையில், தற்போது ஒரு நாள் முழுவதற்கும் தேவையான அளவிற்கு மேல் டெல்லி மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பதால் மீண்டும் நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட துவங்கியுள்ளனர். இது குறித்து தெரிவித்துள்ள ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் டாக்டர் டி கே பாலுஜா அவர்கள், தற்போது ஒரு நாளுக்கு தேவையான அளவுக்கு அதிகமாக ஆக்சிஜன் சப்ளை தங்களிடம் இருப்பதாக கூறியுள்ளார்.

தினசரி தங்களுக்கு 3.6 மெட்ரிக் டன் அளவில் ஆக்ஸிஜன் தேவைப்படும், ஆனால் தற்பொழுது ஆறு டன் தங்களிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தங்களுக்கு ஆக்சிஜன் வழங்கிய இந்திய ரயில்வே மற்றும் டெல்லி அரசுக்கு தங்கள் மருத்துவமனை சார்பில் நன்றியும் தெரிவித்துள்ளார். மேலும் ஒரே இரவில் தங்களுக்கு இந்தியன் ரயில்வே மூலமாக தங்களுக்கு ஆக்சிஜன் வழங்கிய டெல்லி முதல்வருக்கும் தங்கள் நன்றி என தெரிவித்துள்ளார். இந்த மருத்துவமனையில் மட்டுமல்லாமல் பாத்ரா மருத்துவமனை, சர் கங்கா ராம் மருத்துவமனை உள்ளிட்ட பல மருத்துவமனைகளில் தற்பொழுது ஆக்சிஜன் போதிய அளவு இருப்பதாகவும் எனவே நோயாளிகளை அனுமதித்த தாங்கள் தயாராக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகிகள் மற்றும் இயக்குனர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Published by
Rebekal

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

4 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

4 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

4 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

5 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

5 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

5 hours ago