மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள எருமை ஒன்று சாலையில் சாணம் போட்டதால் அதன் உரிமையாளருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
குழந்தைகளால் பெற்றோர்கள் சில இடங்களில் அபராதம் கட்ட வேண்டிய நிலை வரும், அது பலரும் சந்தித்து இருக்கக்கூடிய ஒரு சூழல். ஆனால், விலங்குகளால் உரிமையாளர்களுக்கு அபராதம் என்ற நிலை வராது, சில இடங்களில் ஏதேனும் பொருட்களை சேதப்படுத்தி விட்டால் அதை வாங்கி கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஆனால் மத்திய பிரதேசத்தில் விசித்திரமான ஒன்று நடந்துள்ளது. மாடுகள் வளர்ப்பது சிக்கலான ஒரு காரியம் தான்.
மிகப்பெரிய அளவிலான, அதிக பலன் தரக்கூடிய ஒரு விலங்கு மாடு. பல இடங்களில் மாடுகளை வளர்க்க ஆசை இருந்தாலும் அதை கட்டி வைக்க இடம் இருக்காது. இதனால் சாலைகளில் அலைய விடுவதால் பிறருக்கு தான் துன்பமாக அமைந்து விடுகிறது. தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியர் மாநகராட்சி பகுதியில் உள்ள முக்கியமான சாலை ஒன்றில் சில மாடுகள் சாணம் போட்டு விட்டு சென்றுள்ளன. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பிற வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்ததால் மாட்டின் உரிமையாளருக்கு அந்த மாநகராட்சி நிர்வாகம் 10,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…
சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…
மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…
பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…
டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…