அசாமின் சில்சாரில், ஜெயா தாஸ் மற்றும் படல் தாஸ் தம்பதியினருக்கு 5.2 கிலோகிராம் எடையுடன் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
அசாமின் சில்சாரில், ஜெயா தாஸ் மற்றும் படல் தாஸ் தம்பதியினருக்கு 5.2 கிலோகிராம் எடையுடன் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இவர்களுக்கு பிறந்த முதல் குழந்தை சுமார் 3.8 கிராம் 8 கிலோகிராம் எடை இருந்ததாக கூறுகின்றனர். அசாம் மாநிலத்தில் அதிக எடையுடன் பிறந்த முதல் குழந்தை இது தான் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அப்பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்து, மருத்துவர்கள் குழந்தையை வெளியே எடுத்துள்ளனர்.
இதுகுறித்து,சதீந்திர மோகன் தேவ் சிவில் மருத்துவமனையின் டாக்டர் ஹனிஃப் எம்.டி.அப்சர் ஆலம் லாஸ்கர் கூறுகையில், இப்பெண்ணுக்கு தாமதாமாக பிரசவம் நடைபெற்றுள்ளது. இதுவரை அசாமில் பிறந்த மிகப் பெரிய குழந்தை. அசாமில் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் சராசரி எடை சுமார் 2.5 கிலோகிராம் ஆகும். கடந்த காலத்தில் 4 கிலோகிராம் எடையுடன் புதிதாகப் பிறந்த குழந்தைகள் இருந்தனர், ஆனால் இக்குழந்தை தான் 5.2 கிலோகிராம் எடையுடன் பிறந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும், இப்பெண் கொரோனா தொற்று பயத்தினால், மருத்துவாமனைக்கு வரமால் தாமதித்துள்ளார். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், கர்ப்பத்தின் 38 முதல் 42 வது வாரங்களுக்கு இடையில் பிரசவம் நடைபெறும். 42 வது வாரத்திற்குள் குழந்தைகள் வராதபோது, அவை பிந்தைய கால அல்லது தாமதமான பிரசவமாக கருதப்படுகின்றன.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…