ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் பைசாகி கொண்டாட்டத்தின் போது, நடைமேம்பாலம் இடிந்து விழுந்ததில் 80 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில், பெயின் கிராமத்தில் உள்ள பெனிசங்கத்தில் பைசாகி கொண்டாட்டத்தின் போது, மிகப்பெரும் நடைமேம்பாலம் இடிந்து விழுந்து, விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 80 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
பாலம் இடிந்து விழுந்தபோது, அந்த பாலத்தில் ஏராளமானோர் இருந்ததால், பாரம் தாங்காமல் இடிந்து விழுந்ததாகவும், எழும் இந்த விபத்தில் எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை என ஜம்மு பிரதேச ஆணையர் ரமேஷ் குமார் தெரிவித்தார். செனானி நகராட்சி தலைவர் மாணிக் குப்தா, இந்த விபத்து குறித்து கூறும்போது, 20-25 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர். இதில் 6-7 பேரை மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளோம்.
இந்த சம்பவம் குறித்து அறிந்ததும், மத்திய அமைச்சரும், உதம்பூர் எம்பியுமான ஜிதேந்திர சிங், நாங்கள் உள்ளூர் நிர்வாக அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம், தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…