கர்நாடகாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.231.6 கோடிக்கு மது விற்பனை நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் தற்போது வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், 40 நாள்களாக மதுபானக் கடைகள் மூடப்பட்டது. மத்திய அரசு மதுக்கடை திறக்க அனுமதி கொடுத்தது. இதையடுத்து டெல்லி, கர்நாடக, ஆந்திரா போன்ற பல மாநிலங்களில் மதுக்கடை திறக்கப்பட்டது.
கர்நாடக மாநிலத்தில் கடந்த திங்கள்கிழமை மது கடைகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து மது வாங்க கூட்டம் அலைமோதியது. இதனால், மது பிரியர்கள் சமூக விலகலை கடைபிடித்து நீண்ட வரிசையில் நின்று மது வாங்கிச் சென்றனர். கர்நாடக மாநிலத்தில் 3 வது நாளான நேற்று மட்டும் ரூ.231.6 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது என கூறப்படுகிறது.
நேற்று மட்டும் 7 லட்சம் லிட்டர் பீர் மற்றும் 39 லட்சம் லிட்டர் மதுபானம் விற்பனையானது என்ற தகவல் வெளியாகி உள்ளது. முதல் நாளில் ரூ.45 கோடிக்கும், இரண்டாவது நாளில் ரூ.197 கோடிக்கும், நேற்று ரூ.231.6 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,…
பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 50…
சென்னை : சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அவரது சென்னை இல்லத்தில் போலீஸ் சம்மன் ஒட்டினர்.…
சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…
சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…