Categories: இந்தியா

இணைய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் இந்திய குழந்தைகள்..

Published by
Dhivya Krishnamoorthy

இன்று வெளியான அறிக்கையின்படி, 85 சதவீதம் அதாவது 10ல் 8 இந்தியக் குழந்தைகள் இணைய அச்சுறுத்தலை சர்வதேச சராசரியை விட இரண்டு மடங்கு அதிகமாக எதிர்கொண்டுள்ளனர்.

இந்தியாவில் உள்ள இளம் பெண்களும் சர்வதேச அளவில் 10 முதல் 14 வயதுடைய பெண்கள் 32 சதவீதம் மற்றும் 15 முதல் 16 வயதுடைய பெண்கள் 34 சதவீதம், 17 முதல் 18 வயதுடைய பெண்கள் 21 சதவீதம்  பாலியல் துன்புறுத்தல் அனுபவிக்கின்றனர்.

இனவெறி தவிர இணைய அச்சுறுத்தலின் தீவிர வடிவங்களில் ட்ரோலிங் (36 சதவீதம்), தனிப்பட்ட தாக்குதல் (29 சதவீதம்), பாலியல் துன்புறுத்தல் (30 சதவீதம்), தனிப்பட்ட தீங்கு விளைவிக்கும் அச்சுறுத்தல் (28 சதவீதம்) மற்றும் டாக்ஸிங் (23 சதவீதம் அனுமதியின்றி தனிப்பட்ட தகவல்களை வெளியிடுதல்) ஆகியவை அடங்கும்.

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் முதல் ஸ்னாப்சாட் மற்றும் வாட்ஸ்அப் வரையிலான பதினான்கு கணக்கெடுப்பு தளங்களில் மற்ற நாடுகளில் உள்ள குழந்தைகளை விட இந்திய குழந்தைகள் 1.5 மடங்கு அதிகமாக சைபர்புல்லிங் செய்வதாக தெரிவித்துள்ளனர். ஏறக்குறைய 45 சதவீத இந்தியக் குழந்தைகள் தங்கள் இணைய அச்சுறுத்தல் அனுபவங்களை பெற்றோரிடமிருந்து மறைப்பதாகக் கூறியுள்ளனர்.

ஜூன் 15 முதல் ஜூலை 5 வரை 10 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 11,687 பெற்றோர்களும் அவர்களது குழந்தைகளும் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், பிரேசில் மற்றும் மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளில் இருந்து மின்னஞ்சல்-கணிப்பை முடித்துள்ளனர்.

இந்தியாவில் இணைய அச்சுறுத்தல் ஆபத்தான உச்சத்தை எட்டுகிறது, ஏனெனில் மூன்றில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இணைய இனவெறி, பாலியல் துன்புறுத்தல் மற்றும் உடல் ரீதியான தீங்கு விளைவிக்கும் அச்சுறுத்தல்களை 10 வயதிலேயே எதிர்கொள்கின்றனர்” என்று மெக்காஃபி நிறுவனத்தின் தலைமை தயாரிப்பு அதிகாரி ககன் சிங் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

11 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

11 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

11 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

11 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

12 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

12 hours ago