பொதுத்தேர்வுகளை எப்போது நடத்தலாம் என்று , மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆலோசனை மேற்கொண்ட நிலையில் ,அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குப் பிறகு தேர்வுத் தேதி அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் முதலில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது இதனால்,பள்ளிகள்திறக்கமுடியாத சூழல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து,தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் ,மாணவர்களின் நலன்கருதி பல பள்ளி நிர்வாகம், ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எப்போது நடத்தலாம் என்று, நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்களுடன் மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆலோசனை மேற்கொண்டார்.இதில் பேசிய அமைச்சர் , சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகளை நடத்த இது உகந்த சூழல் இல்லை. தேர்வுகளை எப்போது நடத்தலாம் என்று சூழலைப் பொறுத்து பின்னர் முடிவு எடுக்கப்படும்.ஜனவரி மாதத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் நடத்தப்படாது.அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குப் பிறகு தேர்வுத் தேதி அறிவிக்கப்படும். சிபிஎஸ்இ சார்பில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் குறித்துப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா :தென்னிந்தியாவில் ஏற்கனவே, மொழிப் போர் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசு மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இது…
கொடைக்கானல்: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு…
டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…