பிரிட்டனை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் சிறப்பு விமானம் மூலம் நாடு திரும்பினர்!

Default Image

பிரிட்டனை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் சிறப்பு விமானம் மூலம் நாடு திரும்பினர்.

கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வெளிமாநிலங்கள் மற்றும் மற்ற நாடுகளில் இருந்து வந்தவர்களும் தங்களது சொந்த ஊருக்கு செல்ல இயலாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சர்வதேச விமான போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில், பிரிட்டனில் இருந்து  சுற்றுலா வந்த பிரிட்டன் வாழ் இந்தியர்கள் உட்பட 271 பேர், தங்களது சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாமல், அமிர்தசரஸில் சிக்கிக் கொண்டனர்.

இதனையடுத்து, இவர்கள் அனைவரும் சிறப்பு விமானம் மூலம், ஸ்ரீ குரு ராம் தாஸ் ஜீ என்ற சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, அவர்களது சொந்த ஊருக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tn
axar patel Ruturaj Gaikwad
myanmar earthquake
rishabh pant sanjiv goenka
mk stalin assembly
rishabh pant lsg
delhi parliament assembly