கோ-வின் போர்ட்டல் செயலியில் வெறும் 2 நாளில் 2.28 கோடிக்கு மேல் தடுப்பூசி முன்பதிவு – மத்திய சுகாதார அமைச்சகம்!

Published by
Rebekal

நாடு முழுவதும் மே ஒன்றாம் தேதி மூன்றாம் கட்ட கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட உள்ள நிலையில், இதுவரை 2.28 கோடிக்கு மேல் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டேதான் செல்கிறது. தினமும் லட்சக்கணக்கானோர் புதிதாக பாதிக்கப்படும் நிலையில், ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். இந்நிலையில் ஏற்கனவே 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையில், 3ம் கட்ட தடுப்பூசி போடும் பணி மே ஒன்றாம் தேதி தொடங்கப்பட உள்ளது. மே 1ஆம் தேதி முதல் 18 முதல் 45 வயதான தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தடுப்பூசி போடுவதற்கு முன்பதிவு கோ-வின் போர்ட்டல் செயலியில் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், நேற்று இரவு 8 மணி வரை நாடு முழுவதும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசி மருந்துகள் போடப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் 3ஆம் கட்ட தடுப்பூசி கோ-வின் போர்ட்டல் செயலியில் மொத்தம் வெறும் 2 நாட்களில் மட்டும் 2.28 கோடி முன்பதிவுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

4 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

4 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

5 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

5 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

5 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

5 hours ago