மாநிலங்களிடம் 1.5 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி கையிருப்பு-மத்திய அரசு..!

Default Image

மாநிலங்களிடம் தற்போது 1.5 கோடி கொரோனா தடுப்பூசிகள் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கடந்த ஜனவரி மாதத்திலிருந்து செலுத்தப்பட்டு வருகிறது. 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு, பிரதமர் மோடி மாநிலங்களுக்கான கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசே கொள்முதல் செய்து இலவசமாக வழங்கும் என்று தெரிவித்திருந்தார்.

அதன்படி, மத்திய அரசு தடுப்பூசிகளை தயாரிக்கும் நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்து அதனை மாநிலங்களுக்கு வழங்கி வருகிறது. தற்போது மத்திய அரசு தடுப்பூசிகள் பற்றி தெரிவித்துள்ளதாவது, இதுவரை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 30,54,32,450 டோஸ் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளது.

இதில்,29 கோடியே 04 லட்சத்து 04 ஆயிரத்து 264 டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. மேலும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் 1,50,28,186 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்