டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பகுதியில் உள்ள மக்கள் ஒவ்வொரு ஆண்டும் மாசுபாட்டின் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். அதிகரித்து வரும் மாசுபாட்டால், சுவாசிப்பதில் சிரமம், கண் எரிச்சல் மற்றும் ஒவ்வாமை போன்ற உடல்நலப் பிரச்சினைகளை மக்கள் எதிர்கொள்கின்றனர். இதனை கட்டுப்படுத்த டெல்லியில் கெஜ்ரிவால் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், டெல்லியில் மற்ற மாநிலங்களில் பதிவுசெய்யப்பட்ட Uber ,OLA மற்றும் பிற ஆப்-அடிப்படையிலான வாகனங்கள் நுழைவதை டெல்லி அரசாங்கம் தடை செய்துள்ளது. இந்த அறிவிப்பை டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.
கெஜ்ரிவால் அரசின் இந்த முடிவிற்குப் பிறகு, டெல்லியில் டிஎல் எண்ணுடன் கூடிய ஆப்-சார்ந்த வாகனங்கள் மட்டுமே இயங்கும். உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் டெல்லிக்கு வெளியே பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு தடை விதிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கோபால் ராய் தெரிவித்தார்.
டெல்லி பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறை அறிவிப்பு:
காற்று மாசு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு டெல்லி அரசு குளிர்கால விடுமுறையை அறிவித்துள்ளது. அதன்படி நவம்பர் 9 முதல் நவம்பர் 18 வரை அனைத்து பள்ளிகளிலும் குளிர்கால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, காற்று மாசுபாடு காரணமாக, டெல்லி அரசு பள்ளிகளில் நவம்பர் 10 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு ஆன்லைனில் வகுப்புககள் நடைபெற்றது. குளிர்கால விடுமுறை அறிவிப்புக்குப் பிறகு டெல்லியில் பள்ளிகள் நவம்பர் 18 வரை மூடப்பட்டுள்ளது.
சென்னை : திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அண்மையில் தனது தொகுதியான காட்பாடியில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் பேசுகையில், மாற்றுத்திறனாளிகள்…
சென்னை : திமுக அமைச்சர் பொன்முடி அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசுகையில், உடலுறவு குறித்து மறைமுகமாக இரு சமூகத்தை…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்திருந்திருக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழிசை சௌந்தரராஜன் வீட்டிற்கு நேரில் சென்று…
சென்னை : அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி, விலைமாது பெண் பற்றி கதை கூறினார்.…
பெங்களூரு : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் , டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடின. இதில்…
சென்னை : தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, அவர் பேசிய பேச்சுக்கள்…