இன்று முதல் மால்களை தவிர்த்து மற்ற கடைகள் இயங்கலாம் – மத்திய அரசு அதிரடி.!

Published by
பாலா கலியமூர்த்தி

அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே திறந்து இருப்பதற்கு இதுவரை வழங்கிய அனுமதியை இன்னும் நீட்டிப்பு செய்துள்ளது மத்திய அரசு.

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மே 3 வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அத்தியாவசிய கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. அதுவும், கடைகளை திறக்க நேரம் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இந்த நிலையில் தற்போது மத்திய அரசு ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே திறந்து இருப்பதற்கு இதுவரை வழங்கிய அனுமதியை இன்னும் நீட்டிப்பு செய்துள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அந்தந்த மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் பதிவு செய்யப்பட்ட கடைகள் இன்று முதல் திறந்து கொள்ளலாம் என்று கூறியுள்ளது.

இதையடுத்து கிராமப்புறங்களில் அத்தியாவசிய சேவைகளை வழங்க கூடிய அனைத்து வகையான கடைகளும் திறந்து கொள்ளலாம் என்றும் நகர்ப்புறங்களில் வணிக வளாகம் மற்றும் மார்க்கெட் போன்ற அதிக கூட்டம் சேரும் கடைகளை தவிர்த்து மற்ற அனைத்து முழுமையான கடைகள், அக்கம் பக்க கடைகள் மற்றும் குடியிருப்பு வளாகங்களில் உள்ள கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் காலத்தில் சிறு, குறு தொழில் செய்வோர் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுப்பிய நிலையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

மேலும் நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளுக்குள் வராத பிற பகுதிகளில் உள்ள மார்க்கெட் காம்ப்ளக்ஸ்களில் உள்ள கடைகள் திறந்து கொள்ளலாம். மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகள் அல்லாத பிற பகுதிகளில் உள்ள மார்க்கெட் ஏரியாக்களில் செயல்படும் கடைகள் திறந்து கொள்ள அனுமதிக்கப்பட்ட போதிலும் அங்கு 50 சதவீதம் அளவுக்கு தான் ஊழியர்கள் பணியாற்ற வேண்டும். அதுவும், சமூக விலகல் பின்பற்றப்பட வேண்டும். குறிப்பாக அனைவரும் முகக்கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும். இந்த ஊரடங்கு தளர்வு நடைமுறை ஹாட்ஸ்பாட் பகுதிகளுக்கு பொருந்தாது. மதுபானக்கடைகளை பொறுத்தளவில் அந்தந்த மாநிலங்கள் வைரஸின் தாக்கத்தை பொறுத்தே நிர்வாகம் முடிவெடுத்து கொள்ளலாம் என்றும் ஆன்லைனில் அத்தியாவசிய பொருட்களை தவிர்த்து மற்ற அனைத்துக்கும் தடை தொடரும் என்று தெரிவித்துள்ளது. குறிப்பாக இந்த நடவடிக்கை அந்தந்த மாநிலங்கள் முடிவெடுத்து அறிவிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

4 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

9 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

9 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

9 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

9 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

9 hours ago