புதுச்சேரியில் கொரோனாவுக்காக தனியார் மருத்துவமனையில் பொதுமக்கள் செலவு செய்த தொகையை 3 மாதங்களில் புதுச்சேரி அரசு திருப்பி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில் கொரோனா இரண்டாம் அலை பரவலை சமாளிக்கும் வண்ணம் தனியார் மருத்துவமனையில் இலவசமாக கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்குமாறு அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால், இந்த உத்தரவை மீறி அரியூரில் இருக்கும் வெங்கடேஸ்வரா மருத்துவக்கல்லூரியில், கொரோனாவுக்காக அனுமதிக்கப்படுபவர்களிடம் எக்ஸ் ரே, இசிஜி, ஸ்கேன் போன்றவற்றை கட்டாயப்படுத்தி எடுத்தும் அதற்கு கட்டணம் வசூலிக்கவும் செய்துள்ளனர்.
புதுச்சேரியில் உள்ள இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலத்தலைவர் ஏ.ஆனந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில், தனியார் மருத்துவமனைகள் இலவசமாக மருத்துவம் அளிக்க உத்தரவு வழங்க கோரி வழக்கு ஒன்றை தொடர்ந்தார். தற்போது இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது.
இதில் வழக்கு பதிவு செய்தவர், புதுச்சேரி அரசு, தனியார் மருத்துவமனை முறையே எம்.என்.சுமதி, என்.மாலா, எல்.சுவாமிநாதன் ஆகிய வழக்கறிஞர்கள் வாதிட்டனர். அப்போது தனியார் மருத்துவமனை சார்பில் தெரிவித்ததாவது, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த தொகையான ரூ.2.90 கோடியை வழங்க புதுச்சேரி அரசிற்கு பட்டியல் அனுப்பியுள்ளோம் என்று தெரிவித்தார்.
அரசு தரப்பில் தெரிவித்ததாவது, இந்த பட்டியலை சரிபார்த்து குறிப்பிட்டுள்ள தொகையை வழங்க கால அவகாசம் தேவைப்படுகிறது. அதனால் இந்த வழக்கை 6 வாரங்களுக்கு தள்ளி வைக்குமாறு கேட்டுக்கொண்டார். இதனை அடுத்து இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி தெரிவித்ததாவது,
தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கவேண்டும் என்ற உத்தரவின்படி, பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட தொகையை அந்தந்த நபர்களுக்கு 3 மாதங்களுக்குள் திருப்பி வழங்க வேண்டும். அதேபோல் தனியார் மருத்துவமனைக்கு வழங்க வேண்டிய தொகையும் சரிபார்த்து வழங்கவும் கூறி புதுச்சேரி அரசிற்கு உத்தரவிட்டு, இந்த வழக்கை 6 வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளனர்.
சென்னை : தமிழ்நாட்டில் பிரதான கட்சிகள் (அதிமுக, திமுக) கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து இருந்தாலும் , தேர்தல் முடிந்த…
டெல்லி : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…