தொடர் கனமழை எதிரொலி : பத்தனம்திட்டா மாவட்டத்திற்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை.!

Published by
மணிகண்டன்

பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பம்பா அணையின் நீர்மட்டம் தற்போது 983.05 மீட்டராக உயர்ந்துள்ளதை அடுத்து, அம்மாவட்டத்திற்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவின் பல பகுதிகளில் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் கேரள மாநிலத்தில் பல்வேறு நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பம்பா அணை கனமழையின் காரணமாக நிரம்பி வழிகிறது.

பம்பா அணையின் நீர்மட்டம் தற்போது 983.05 மீட்டராக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையமானது, பத்தனம்திட்டா மாவட்டத்திற்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.

984.5 மீட்டராக பம்பா அணையின் நீர்மட்டம் உயரும்போது பத்தனம்திட்டா மாவட்டத்திற்கு சிவப்பு நிற எச்சரிக்கை விதிக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கனமழை தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக அணையின் நீர்மட்டமானது விரைவில் 984 மீட்டராக உயரும் என கூறப்படுகிறது.

தொடர் மழையின் காரணமாக ஆலுவாவில் உள்ள சிவன் கோவிலின் ஒரு பகுதி மழைநீரால் மூழ்கியுள்ளது. திருசூர் மாவட்டம் மன்னுத்து பைபாஸில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் கோழிக்கோடு மாவட்டத்தில் இந்திய வானிலை ஆய்வு மையம், தொடர் கனமழை காரணமாக சிவப்பு நிற எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும், கேரளாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் எனவும் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளார்.

மாநிலத்தில் பருவமழையின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டமானது 136 அடியை எட்டும்போது அணையில் இருந்து மதகுகளின் வழியாக வைகை அணைக்கு நீர் வெளியேற்றப்படும் எனவும், இதற்கான கோரிக்கையானது தமிழக அரசிடம் விடுக்கப்பட்டுள்ளது எனவும் கேரள முதல்வர் முன்னரே தெரிவித்திருந்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

லஷ்கர் – இ – தொய்பா தளபதி சுட்டுக்கொலை.! இந்திய ராணுவம் அதிரடி..!!

லஷ்கர் – இ – தொய்பா தளபதி சுட்டுக்கொலை.! இந்திய ராணுவம் அதிரடி..!!

பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய…

20 minutes ago

ஆளுநர் நடத்தும் மாநாடு : அரசு & தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் புறக்கணிப்பு.!

உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…

3 hours ago

TNPSC குரூப் 4 தேர்வு நாள் அறிவிப்பு! எப்போது தேர்வு.? எத்தனை பணியிடங்கள்.?

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …

3 hours ago

எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு.., பதிலடி கொடுக்கும் இந்தியா.!

காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான்…

4 hours ago

RCB vs RR : சொந்த மைதானத்தில் பெங்களூருவின் முதல் வெற்றி! போராடி தோற்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

14 hours ago

இனி இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் கிடையாது! பிசிசிஐ அதிரடி முடிவு!

டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…

15 hours ago