இலங்கை அதிபர் வருகைக்கு எதிர்ப்பு ! டெல்லியில் வைகோ கைது

Default Image

ராஜபக்சவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் போராட்டம் நடத்திய வைகோ கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் புதிய அதிபராக மகிந்த ராசபக்சவின் சகோதரர்  கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றார்.இவரை தொடர்ந்து மகிந்த ராசபக்ச பிரதமராக பதவியேற்றார்.
இதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அதிபராக பொறுப்பேற்ற கோத்தபய ராஜபக்ச மற்றும் பிரதமராக பதவியேற்ற மகிந்த ராசபக்சவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.மேலும் இரு நாடுகளின் உறவுகளை மேம்படுத்தும் வகையில் அதிபர்  கோத்தபய ராஜபக்சவை இந்தியாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.பிரதமரின் அழைப்பை ஏற்று  கோத்தபய ராஜபக்ச  இன்று முதல் 3 நாட்கள் பயணமாக இந்தியாவிற்கு வருகிறார்.
கோத்தபய ராஜபக்ச இந்தியாவிற்கு வரும் நிலையில் அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில்  உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில்  போராட்டம் நடைபெற்றது.இதன் பின்பு வைகோ உள்ளிட்ட மதிமுகவினரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Joe Root
erode by election 2025
edappadi palanisamy mk stalin
R Ashwin -- Virat kohli
abhishek sharma varun chakravarthy
vidaamuyarchi anirudh