Categories: இந்தியா

எதிர்க்கட்சிகள் கூட்டம், எங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை- குமாரசாமி.!

Published by
Muthu Kumar

பெங்களுருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என குமாரசாமி கூறியுள்ளார்.

வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்த்து வெற்றி பெற, வலுவான கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முயற்சி செய்து வருகின்றன. இதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளும் கடந்த ஜுன் 23இல் பாட்னாவில் ஆலோசனைக்கூட்டம் நடத்தின. அடுத்த கூட்டம் பெங்களுருவில் நடைபெறுவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி கர்நாடக தலைநகர் பெங்களுருவில் இன்று மற்றும் நாளை எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகாஜூனன் கார்கே தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற்க 24 எதிர்க்கட்சிகளுக்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த நிலையில் கர்நாடக முன்னாள் முதல்வரும், ஜனதா தள JD(S) கட்சியின் தலைவருமான குமாரசாமி, பெங்களுருவில் நடைபெறும் எதிர்க்கட்சிக் கூட்டத்திற்கு தனக்கு எதுவும் அழைப்பு வரவில்லை என கூறியுள்ளார். எதிர்க்கட்சிகள் ஒருபோதும் ஜனதா தள கட்சியை, தங்களது ஒரு பகுதியாக நினைக்கவில்லை என்றும் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

நாங்களும் எந்த வித மிகப்பெரிய கூட்டணிக்கட்சியிலும் இணைய போவதில்லை. இதேபோல் பாஜக தரப்பிலும் இருந்து தேசிய ஜனநாயக கூட்டணியிலும் எங்களுக்கு அழைப்பு வரவில்லை என்றும், நாங்கள் வரவிருக்கும் தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம் எனவும் அவர் மேலும் கூறினார்.

Published by
Muthu Kumar

Recent Posts

தலைவா… தெய்வமே… பரவசத்தில் வெறும் கையில் ரஜினி ரசிகர் செய்த செயல்.!

கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…

18 minutes ago

புதிய போப் ஆண்டவர் யார்? உலகளாவிய தேர்வுக் குழுவில் 4 இந்திய கார்டினல்கள்!

வாட்டிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் கத்தோலிக்க திருச்சபை போப் பிரான்சிஸ், தனது 88வது வயதில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது…

20 minutes ago

டாஸ்மாக் ஊழியர்களுக்கு நற்செய்தி.., சம்பள உயர்வை அறிவித்த அமைச்சர் செந்தில் பாலாஜி.!

சென்னை : டாஸ்மாக்கில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி…

1 hour ago

வெளியானது UPSC தேர்வு முடிவுகள்.., நான் முதல்வன் திட்ட மாணவன் சாதனை!

சென்னை : இந்தியாவில் IAS, IPS, IFS, IRS ஆகிய சிவில் சர்வீஸ் காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் கடந்த 2024 ஜூன்…

1 hour ago

“சாதி சான்றிதழ்களில் எழுத்துப் பிழைகள் இருக்கக் கூடாது”- உயர்நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…

3 hours ago

ஏப்ரல் 25 மற்றும் 26இல் துணைவேந்தர்கள் மாநாடு – ஆளுநர் மாளிகை அறிக்கை.!

உதகை : ஊட்டியில் ஆளுநர் கூட்டும் துணைவேந்தர்கள் கூட்டம் ஏப்ரல் 25,26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என குறிப்பிட்டு…

3 hours ago