வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் ! குடியரசு தலைவரை சந்திக்கும் எதிர்க்கட்சித் தலைவர்கள்

Published by
Venu

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டங்கள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்தை சந்திக்க உள்ளனர்.

இந்த சந்திப்பில்  காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி, தேசிய வாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சரத் பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சீதாராம் யெச்சூரி,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த டி ராஜா, திமுகவை  சேர்ந்த டி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோர் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்தை சந்திக்க உள்ளனர்.

குடியரசு தலைவரை சந்திப்பதற்கு முன்பாக எதிர்கட்சியினரை சேர்ந்த தலைவர்கள் ஆலோசனை நடத்த வாய்ப்பு உள்ளது.குடியரசு தலைவரை சந்திக்க உள்ளதை ஏற்கனவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா உறுதிப்படுத்தியுள்ளார்.”பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் (வேளாண் சட்டங்களை எதிர்ப்பவர்கள்) குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்தைச் சந்திப்பதற்கு முன் சர்ச்சைக்குரிய  சட்டங்கள் குறித்து உட்கார்ந்து விவாதித்து கூட்டு நிலைப்பாட்டை எடுப்பார்கள்” என்று  தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

செப்டம்பரில் இயற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்கள் விவசாயத் துறையில் பெரிய சீர்திருத்தங்களாக அரசாங்கத்தால் கணிக்கப்பட்டுள்ளன. அவை இடைத்தரகர்களை அகற்றி விவசாயிகள் நாட்டில் எங்கும் விற்க அனுமதிக்கும்.ஆனாலும் டெல்லி-ஹரியானா எல்லையில் 13வது நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Venu

Recent Posts

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

1 hour ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

2 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

2 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

2 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

3 hours ago

தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?

சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…

3 hours ago