மாநிலங்களவையை சுமூகமாக நடத்த ஒத்துழைக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் அவைத் தலைவர் வெங்கையா நாயுடு வலியுறுத்தினார்.
புத்தாண்டு விடுமுறைக்கு பிறகு மாநிலங்களவை இன்று கூடியதும், மேகேதாட்டு, ரபேல் விவகாரத்தை எழுப்பி அ.தி.மு.க., காங்கிரஸ் உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர். முழக்கங்களை எழுப்பி நேரத்தை கடத்தாமல், ஆரோக்கியமான விவாதம் நடத்த ஒத்துழைக்க வேண்டும் என மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு கேட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்தும் எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பியதால், மாநிலங்களவை 2 மணி வரை ஒத்திவைத்து அவைத் தலைவர் வெங்கையா நாயுடு உத்தரவிட்டார்.
மக்களவையில் கூடியதும், மேகேதாட்டுவில் ஆய்வு செய்ய கர்நாடக அரசுக்கு அளிக்கப்பட்ட அனுமதியை திரும்பப் பெற வேண்டும் என்று அ.தி.மு.க. உறுப்பினர்கள் வலியுறுத்தி முழக்கமிட்டனர். ரபேல் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அவை முன்பு திரண்டு கூச்சலிட்டனர். இதனால், அவை பணிகள் பாதிக்கப்பட்டன.
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…