பரோட்டாவுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தற்போது 5 சதவீத ஜிஎஸ்டி என மத்திய அமைச்சகம் கூறியுள்ளது.
பரோட்டா என்பது தமிழர்கள் மட்டுமல்லாமல் தென் இந்தியர்களின் பிரியமான உணவாக உள்ளது. இந்நிலையில், பெங்களூரு சேர்ந்த ஐடி பிரெஷ் ஃபுட் நிறுவனம்(ID Fresh Food) இட்லி, தோசை மாவு, தயிர், பன்னீர், பரோட்டா உள்ளிட்ட அப்படியே சமைக்கும் உணவுப் பொருட்களை விற்பனை செய்து வருகிறது.
இதையடுத்து, இந்த நிறுவனம் ரொட்டி, சப்பாத்தி ஆகியவைக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதாகவும், பரோட்டாவுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதாகவும் கூறியது எனவே இதை குறைத்து உத்தரவிட வேண்டும் என Authority for Advance Rulings அமைப்பிடம் வழக்கு தொடர்ந்தது. இந்த அமைப்பானது ஜிஎஸ்டி சம்பந்தமான புகார்களை விசாரித்து முடிவெடுக்கும் மத்திய அரசின் அமைப்பாகும்.
உணவகங்களில் உண்ணும் பரோட்டாக்களுக்கு 5% மட்டுமே ஜிஎஸ்டி- மத்திய அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. போராட்டங்களுக்கு 18 18% ஜிஎஸ்டி வரி வசூலிப்பதாக சமூகவலைதளத்தில் தகவல் பரவியது.இந்நிலையில் தலைவர் ஆனந்த் மகேந்திரா ஆகியோர் ட்விட்டரில் விமர்சித்தனர் இதையடுத்து பதப்படுத்தப்படாத உடனடியாக உண்ணும் கூடிய வகையில் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் பரிமாற கூடிய பரோட்டாக்களுக்கு 5% மட்டுமே ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என மத்திய அமைச்சகம் கூறியது.
உடனடியாக சாப்பிடுக்கூடிய பரோட்டாக்களுக்கும் பதப்படுத்தப்பட்ட பரோட்டாக்களுக்கும் வித்தியாசம் இருக்கு என்று கூறியுள்ளார்கள். நாள்தோறும் ஏழை எளிய மக்கள் உண்ணக்கூடிய புரோட்டாக்கு 5% ஜிஎஸ்டியே வசூலிக்கப்படும் எனா தெரிவித்துள்ளது.
டெல்லி : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் (2011) அமைச்சராக இருந்த போது பதியப்பட்ட…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் பாதி முடிந்த நிலையில் அடுத்த பாதி போட்டிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. மெல்ல மெல்ல…
டெல்லி : காஷ்மீர், பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூடிய நிலையில், காவல்துறை மானியக் கோரிக்கை குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில்…
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு நடத்தும் பள்ளிகளிலும், தேசிய கல்வி கொள்கையை பின்பற்றும் தனியார் பள்ளிகளும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய 9 அறிவிப்புகளை அறிவித்தார்.…