பரோட்டாவுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தற்போது 5 சதவீத ஜிஎஸ்டி என மத்திய அமைச்சகம் கூறியுள்ளது.
பரோட்டா என்பது தமிழர்கள் மட்டுமல்லாமல் தென் இந்தியர்களின் பிரியமான உணவாக உள்ளது. இந்நிலையில், பெங்களூரு சேர்ந்த ஐடி பிரெஷ் ஃபுட் நிறுவனம்(ID Fresh Food) இட்லி, தோசை மாவு, தயிர், பன்னீர், பரோட்டா உள்ளிட்ட அப்படியே சமைக்கும் உணவுப் பொருட்களை விற்பனை செய்து வருகிறது.
இதையடுத்து, இந்த நிறுவனம் ரொட்டி, சப்பாத்தி ஆகியவைக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதாகவும், பரோட்டாவுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதாகவும் கூறியது எனவே இதை குறைத்து உத்தரவிட வேண்டும் என Authority for Advance Rulings அமைப்பிடம் வழக்கு தொடர்ந்தது. இந்த அமைப்பானது ஜிஎஸ்டி சம்பந்தமான புகார்களை விசாரித்து முடிவெடுக்கும் மத்திய அரசின் அமைப்பாகும்.
உணவகங்களில் உண்ணும் பரோட்டாக்களுக்கு 5% மட்டுமே ஜிஎஸ்டி- மத்திய அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. போராட்டங்களுக்கு 18 18% ஜிஎஸ்டி வரி வசூலிப்பதாக சமூகவலைதளத்தில் தகவல் பரவியது.இந்நிலையில் தலைவர் ஆனந்த் மகேந்திரா ஆகியோர் ட்விட்டரில் விமர்சித்தனர் இதையடுத்து பதப்படுத்தப்படாத உடனடியாக உண்ணும் கூடிய வகையில் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் பரிமாற கூடிய பரோட்டாக்களுக்கு 5% மட்டுமே ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என மத்திய அமைச்சகம் கூறியது.
உடனடியாக சாப்பிடுக்கூடிய பரோட்டாக்களுக்கும் பதப்படுத்தப்பட்ட பரோட்டாக்களுக்கும் வித்தியாசம் இருக்கு என்று கூறியுள்ளார்கள். நாள்தோறும் ஏழை எளிய மக்கள் உண்ணக்கூடிய புரோட்டாக்கு 5% ஜிஎஸ்டியே வசூலிக்கப்படும் எனா தெரிவித்துள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…