இனி குடும்பத்துக்கு 2 குழந்தைகள் மட்டும்தான்.! ஆர்எஸ்எஸ் தலைவர் கருத்துக்கு பதிலடி கொடுத்த ஒவைசி.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் மக்கள்தொகையை  கட்டுப்படுத்த 2 குழந்தைகள் மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற புதிய திட்டத்தை கொண்டுவர வலியுறுத்தி பேசினார்.
  • தெலுங்கானாவில் பிரசாரத்துக்கான பொதுக்கூட்டத்தில் பதிலளிக்கும் விதமாக பேசிய ஒவைசி, இந்தியாவின் உண்மையான பிரச்சனை மக்கள் தொகை கிடையாது. வேலைவாய்ப்பின்மை தான் என பதிலடி கொடுத்தார்.

உத்தரப் பிரதேசம் மாநிலம், மொராதாபாத் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்ஐடி)-யில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசுகையில், இந்தியா ஒரு வளர்ந்து வரும் நாடு, இங்கு கட்டுப்பாடற்ற மக்கள்தொகை நாட்டின் வளர்ச்சிக்கு நல்லதல்ல, நாட்டில் அதிகரித்து வரும் மக்கள்தொகை நெருக்கடியைக் கட்டுப்படுத்த ஒரு புதிய சட்டம் வேண்டும் என வலியுறுத்தி, அதில் இரண்டு குழந்தைகள் மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற திட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். இது தொடர்பாக மத்திய அரசு தான் முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

தெலுங்கானாவில் நடைபெறவிருக்கும் நகராட்சி தேர்தல் பிரசாரத்துக்கான பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக பேசிய ஒவைசி, அப்படி பேசியதற்கு நீங்கள் வெட்கப்பட வேண்டும். எனக்கு இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருக்கின்றன. பின்னர் பல பாஜக தலைவர்களுக்கும் இரண்டுக்கும் மேற்பட்ட பிள்ளைகள் இருக்கிறார்கள். மேலும் முஸ்லிம்களின் மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாட்களாகவே ஆர்எஸ்எஸ்-க்கு இருக்கிறது என்றும், இந்தியாவின் உண்மையான பிரச்சனை மக்கள் தொகை கிடையாது. வேலைவாய்ப்பின்மை தான் என தெரிவித்தார்.

மேலும், எத்தனை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு கேள்வி எழுப்பியுள்ளார், பின்னர் 2018-ல் வேலைவாய்ப்பின்மை காரணத்தினால் ஒரு நாளைக்கு 36 இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டதாக நரேந்திர மோடியின் அரசை ஒவைசி குற்றசாட்டினார். அடுத்த 5 ஆண்டுகளுக்கு உங்களால் வேலைவாய்ப்பை கொண்டுவர முடியாது. அதனால் தான், 2 குழந்தைகளை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று சொல்கிறீர்கள். அதைத்தொடர்ந்து இந்திய மக்கள் தொகையின் 60% சதவீதம் பேர், 40 வயதிற்கு கீழ் இருப்பவர்கள் என்றும் ஒவைசி பதில் கருத்து தெரிவித்தார்.

 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி வழக்கு…9 பேருக்கு ஆயுள்தண்டனை அறிவிப்பு!தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி வழக்கு…9 பேருக்கு ஆயுள்தண்டனை அறிவிப்பு!

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி வழக்கு…9 பேருக்கு ஆயுள்தண்டனை அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…

32 minutes ago
டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …

2 hours ago
பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…

2 hours ago
அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!

அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…

3 hours ago
அத்துமீறிய பாகிஸ்தானின் ட்ரோன்கள்? சுட்டு வீழ்த்தப்பட்டதா?அத்துமீறிய பாகிஸ்தானின் ட்ரோன்கள்? சுட்டு வீழ்த்தப்பட்டதா?

அத்துமீறிய பாகிஸ்தானின் ட்ரோன்கள்? சுட்டு வீழ்த்தப்பட்டதா?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…

4 hours ago
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

19 hours ago