டெல்லி முதல்வர் மகளிடம் ஆன்லைனில் பண மோசடி…! 3 பேர் கைது…!

Published by
லீனா

டெல்லி முதல்வர் மகளிடம் ஆன்லைனில் பண மோசடியில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த போலீசார். 

இன்று ஆன்லைன் மோசடி என்பது மிகவும் சகஜமாக மாறியுள்ளது. ஆன்லைன் மோசடி செய்பவர்கள் பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை பலரையும் ஏமாற்றி வருகின்றனர். அந்த வகையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகளான ஹர்ஷிதா தனது பழைய சோபாவை ஆன்லைனில் விற்பதற்காக, தனியார் இணையத்தில் பதிவு செய்திருந்தார்.

இதனையடுத்து அவரை மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு அதனை வாங்குவதாக விருப்பம் தெரிவித்தார். பின் ஆன்லைன் மூலம் பணம் செலுத்துவதாக கூறி, அவர் ஒரு கியூ ஆர் கோடை  அனுப்பி அதை ஸ்கேன் செய்யுமாறும் கூறியுள்ளார். ஹர்ஸிதா அதை ஸ்கேன் செய்தபோது, அவரது வங்கி கணக்கில் சிறிய தொகை ஒன்று சேர்ந்துள்ளது.

பின் முழு தொகையை செலுத்துவதாக கூறி மற்றொரு கியூ ஆர் கோடு அனுப்பினார் அதை ஹர்ஷிதா ஸ்கேன் செய்தபோது அவரது வங்கி கணக்கில் இருந்து முதலில் ரூ.20,000, பின் ரூ.14,000 பணம் எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து டெல்லி போலீசாரிடம், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்தார். இது தொடர்பாக விசாரித்த போலீசார், ஹரியானாவின் நூ பகுதியை சேர்ந்த சாஜித், உத்தரப்பிரதேசத்தின் மதுராவை சேர்ந்த கபில், மன்விந்தர் சிங் ஆகியோரை கைது செய்தனர். இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான வாரிஸ் என்பவர் தலைமறைவாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Published by
லீனா

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

5 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

5 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

5 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

5 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

6 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

6 hours ago