ஆன்லைன் லாட்டரி தொடங்குவது பற்றி மகாராஷ்டிரா அரசு தீவிர ஆய்வில் ஈடுபட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் லாட்டரி மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 132கோடி ரூபாய் வருமானம் வருகிறது. இதில் 125கோடி ரூபாய் பிற மாநில லாட்டரி மூலம் பெறப்படும் வரியாகும். அரசுக்குச் சொந்தமான லாட்டரி மூலம் 7கோடி ரூபாய் மட்டுமே வருமானம் வருகிறது.
இந்நிலையில் கேரள மாநிலத்தைப் போல் மகாராஷ்டிரத்திலும் ஆன்லைன் லாட்டரி தொடங்குவது பற்றி ஒரு குழு அமைத்து ஆய்வு செய்து வருவதாக அரசின் முதன்மைச் செயலாளர் விஜய் குமார் கவுதம் தெரிவித்துள்ளார்.
இந்த ஆன்லைன் லாட்டரி முறை வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வர உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கேரளத்தில் லாட்டரி மூலம் ஆண்டுக்கு ஆயிரத்து முந்நூறு கோடி ரூபாய் வருமானம் வருவதையும், வடகிழக்கு மாநிலங்கள் லாட்டரி மூலம் பெருமளவில் வருமானம் ஈட்டுவதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் …..
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…