மலிவு விலையில் வெங்காயம்…மத்திய அரசின் புதிய நடவடிக்கை..!

Default Image

சமீபத்தில் மகாராஷ்ட்ரம், ஆந்திரா, குஜராத், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இடைவிடாமல் பெய்த மழையால், வெங்காயம் பயிர்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டது. இதன்காரணமாக, வெங்காயத்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை உயரும் சூழல் உருவானது.

இந்நிலையில், விலையேற்றத்தை கட்டுப்படுத்த மத்திய அரசின் தொகுப்பில் உள்ள 56 ஆயிரம் டன் வெங்காயத்தில் 16 ஆயிரம் டன்னை விற்பனைக்கு விடுவிக்க உத்தரவிடப்பட்டது. இந்த வெங்காயங்கள், மத்திய அரசின் ‘நாபெட்’ என்ற கூட்டுறவு அங்காடிகள் மூலம் அனுப்பப்படும். இந்த வெங்காயம், கிலோ ஒன்றுக்கு 22 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், தொகுப்பில் இருந்து தினம்தோறும் சுமார் 2 டன் வெங்காயத்தை டெல்லியில் விற்பனைக்கு அனுப்புகிறது.

மேலும், சந்தைகளில் வெங்காயத்தின் விலை கிலோவுக்கு 70 முதல் 80 வரை விற்கப்படுவதால், இந்த கூட்டுறவு அங்காடிகள் மூலம் கிலோவுக்கு 22 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதற்காக டெல்லி மக்களின் கூட்டம் அங்கு அதிகரிக்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்