அடப்பாவிகளா!!ஒருதலைக்காதல்..கடத்தி ஓடும் காரில் பெண்ணுக்கு தாலி கட்டி..பேஸ்புக்கில் வீடியோ பதிவிட்டு துணிகர கொடுமை..!

Published by
kavitha
  • காரில் கடத்தி சென்று பெண்ணிற்கு கட்டாயதாலிக்கட்டிய இளைஞர்,மருத்துவமனையில் பெண்ணின் தந்தை அனுமதி
  • கட்டாய தாலிக்கட்டிய வீடியாவை பேஸ்புக்கில் பகிர்ந்து இளைஞர்கள் துணீகரம் என்று ஒரு தலைக்காதல் கொடுமை

கர்நாடகா மாநிலத்தில் இருக்கிறது ஹசான் மாவட்டம் இந்த மாவட்டத்தில் உள்ள அர்சிகேரே என்ற கிராமத்தை சேர்ந்தவர் தான் மனுகுமார் என்ற இளைஞர். இவர் தனது உறவுக்கார பெண்ணை கடந்த ஒரு வருடமாக ஒருதலையாக காதலித்து உள்ளார். தன் காதலை பலமுறை அப் பெண்ணிடம் மட்டுமல்லாமல் அவரது வீட்டிலும் தெரியப்படுத்தி உள்ளார். ஆனால் அப்பெண் மணுவின் காதலை ஏற்கவில்லை என கூறப்படுகிறது. அப்பெண்ணின் வீட்டாருக்கும் அந்த இளைஞர்க்கு  மகளை கட்டிக் கொடுப்பதில் சம்மதமில்லை என்று தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை அன்று வழக்கம் போல் அதே பகுதியில் உள்ள டெய்லர் கடைக்கு வேலைக்கு சென்ற பெண் இரவு நெடுநேரம் ஆகிய பின்னரும் வீடுதிரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் பெற்றோர், உறவினர்கள்பல இடங்களில் தேடியுள்ளனர்.ஆனால் எங்கு தேடியும் கிடைக்காததால், துத்தா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகார் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர் அதில் மனுகுமார் என்ற இளைஞர் தனது நண்பர்களின் உதவியோடு  இளம் பெண்ணை காரில் கடத்தி  சென்றதும் காரில் வைத்தே அப்பெண்ணிற்கு கட்டாயத் தாலிகட்டியதும் தெரியவந்துள்ளது.

தாலிக்கட்டிய அப்பெண்ணோடு அந்த இளைஞர்  ராமாநகாராவில் உள்ள உறவினர் வீட்டில் அடைக்கலம் புகுந்தனர்.தகவல் அறிந்து  உடனே ராமாநகாரா பகுதிக்கு விரைந்த காவல்துறையினர் அந்த பெண்ணை மீட்டனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக  மனுகுமார் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்து அவர்களிடம் விசாரித்து வந்தனர்.

விசாரணையில் மனுகுமார் அளித்த வாக்குமுலமானது: டெய்லர் கடைக்கு பணிக்கு தினமும் சென்ற அப்பெண்ணை நோட்டமிட்டு வந்தாகவும் கடத்தலன்று நாங்கள் பேருந்து நிலையத்தில் காருடன் காத்திருந்தோம் அப்போது பேருந்தில் ஏறுவதற்காக நின்ற பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் கடத்தி, காரில் வைத்தே திருமணம் செய்ததாக கூறினார். மேலும் தாலிக்கட்டும் போது பெண்ணின் அழுகை குரல் வெளியே கேட்காமல் இருக்க பாட்டை சத்தமாக ஒலிக்க செய்தோம் என்று தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் கட்டாய தாலிகட்டிய திருமண வீடியோ காட்சியை என்னுடைய பேஸ்புக்கில் வெளிட்டேன் என்று தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில் பேஷ்புக்கில் மணு வெளியிட்ட வீடியோவானது சமூகவலையதலத்தில் அதிகவேகமாக பரவியது.ஏற்கனவே பெண் காணாமல் போனது தொடர்பாக விசாரித்து வரும் காவல்துறையின் பார்வையில் இந்த வீடியோ பட்டது.உடனே இது தொடர்பாக களமிரங்கிய காவல்துறையினர் மனுகுமாரையும், அவரது நண்பர்கள் 2 பேரையும் கைது செய்னர் மேலும் ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரத்தை அறிந்த அப்பெண்ணின் தந்தை தற்கொலைக்கு முயன்று, மருத்துவமனையில் தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

“நான் கமல் ரசிகை…இப்போ ரஜினி ரசிகையா மாறிட்டேன்”…நடிகை அபிராமி நெகிழ்ச்சி!

“நான் கமல் ரசிகை…இப்போ ரஜினி ரசிகையா மாறிட்டேன்”…நடிகை அபிராமி நெகிழ்ச்சி!

சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…

6 mins ago

இந்த 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…

30 mins ago

திருப்பதி லட்டு விவகாரம் : 34 ஆயிரம் கர்நாடகா கோயில்களுக்கு பறந்த உத்தரவு.!

பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…

1 hour ago

INDvsBAN : வங்கதேசத்துக்கு 515 ரன்கள் இலக்கு! கட்டுப்படுத்துமா இந்திய அணி?

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…

1 hour ago

“நமக்கு அது செட் ஆகாது”…வேட்டையன் இயக்குனருக்கு கண்டிஷன் போட்ட ரஜினிகாந்த்!

சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…

2 hours ago

“நான் ஒரு தோற்றுப்போன அரசியல்வாதி.,” கமல்ஹாசன் பேச்சு.!

சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…

2 hours ago