லடாக் பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15-ம் தேதி இந்தியா, சீன ராணுவத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனத் தரப்பில் 30 பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாயது. பிறகு, இரண்டு நாள்கள் கழித்து சீனா இராணுவம் 10 இந்திய ராணுவ வீரர்களை விடுவித்தது. இதனால், எல்லையில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது.
இதையடுத்து, கடந்த 22-ஆம் தேதி மோல்டோவில் இந்தியா, சீனா ராணுவ கமாண்டர்களுக்கிடையில் இரண்டாவது முறையாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை சுமார் 11 மணி நேரம் நடைபெற்றது.
பேச்சுவார்த்தையில் கிழக்கு லடாக்கில் இந்திய, சீன படைகளை விலக்கிக்கொள்ள ஒருமித்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் விளக்கம் அளித்தது.
இந்நிலையில், பேச்சுவார்த்தையின் ஒப்பந்தத்தின் படி கல்வான் பகுதியிலிருந்து சீன ராணுவம் படைகளை விலக்கிக் கொண்டதாக நேற்று தகவல் வெளியானது. ஆனால், சீனா தனது படைகளை விலக்கி கொள்ளாமல் தொடர்ந்து முன்னேறி வருகிறது.
இது குறித்த புகைப்படம் வெளியாகி உள்ளது. அதில், மே 21-ம் தேதி எடுக்கப்பட்ட புகைப்படத்தில் கல்வான் பள்ளத்தாக்கில் குறைவாக இருந்த சீனா படைகள், கடந்த 22 -ம் தேதி எடுக்கப்பட்ட புகைப்படத்தில் சீனா படைகள் அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…