ஒரு பக்கம் பேச்சு வார்த்தை.! மறுபக்கம் ஊடுருவலை தொடரும் சீனா .!

Default Image

லடாக் பகுதியில்  கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த  15-ம் தேதி இந்தியா, சீன ராணுவத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனத் தரப்பில் 30 பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாயது. பிறகு, இரண்டு நாள்கள் கழித்து சீனா இராணுவம் 10 இந்திய  ராணுவ வீரர்களை விடுவித்தது. இதனால், எல்லையில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது.

இதையடுத்து, கடந்த  22-ஆம் தேதி மோல்டோவில் இந்தியா, சீனா  ராணுவ கமாண்டர்களுக்கிடையில் இரண்டாவது முறையாக  பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை சுமார் 11 மணி நேரம் நடைபெற்றது.

பேச்சுவார்த்தையில் கிழக்கு லடாக்கில்  இந்திய, சீன படைகளை விலக்கிக்கொள்ள ஒருமித்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் விளக்கம் அளித்தது.

இந்நிலையில், பேச்சுவார்த்தையின்  ஒப்பந்தத்தின் படி கல்வான் பகுதியிலிருந்து சீன ராணுவம் படைகளை விலக்கிக் கொண்டதாக  நேற்று தகவல் வெளியானது. ஆனால், சீனா தனது படைகளை விலக்கி கொள்ளாமல் தொடர்ந்து முன்னேறி வருகிறது.

இது குறித்த புகைப்படம் வெளியாகி உள்ளது. அதில், மே 21-ம் தேதி எடுக்கப்பட்ட புகைப்படத்தில் கல்வான் பள்ளத்தாக்கில் குறைவாக இருந்த சீனா படைகள், கடந்த 22 -ம் தேதி எடுக்கப்பட்ட புகைப்படத்தில்  சீனா படைகள் அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Virat Kohli - TEST Cricket
Vikram Misri
Volunteers for INDIAN ARMY
Sofiya Qureshi
Vyomika Singh
S-400 air defense system