வேலை இழந்ததால் தான் வேலை பார்த்த கம்பெனியையே ஹேக் செய்த ஐ.டி பட்டதாரி.!

Published by
மணிகண்டன்

டெல்லியை சேர்ந்த ஐடி பட்டதாரி ஒருவர், ஊரடங்கு காலத்தில் வேலை இழந்ததால், தான் வேலைபார்த்த கம்பெனியின் சர்வரையே ஹேக்கிங் செய்து கம்பெனிக்கு சுமார் 3 லட்சம் வரையில் நஷ்டம் ஏற்படுத்தியுள்ளார். இதன் காரணமாக அந்த ஐடி பட்டதாரியை போலீசார் கைது செய்தனர்.

டெல்லி, பழைய மயூஜ்பூர் பகுதியில் வசித்து வரும் விகேஷ் ஷர்மா எனும் ஐடி பட்டதாரி ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். ஊதிய விவகாரத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஊரடங்கு சமயத்தில் அவரை நிறுவனம் வேலையில் இருந்து நீக்கியது.

இதனை பொறுத்துக்கொள்ளாத விகேஷ் ஷர்மா, தான் வேலைபார்த்து வந்த நிறுவனத்தில் பதியப்பட்டிருந்த 18,000 பேரின் தரவுகளை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக 22,000 போலி தரவுகளை பதிந்திருந்தார். இதனால், அந்நிறுவனத்திற்கு சுமார் 3 லட்சம் இழப்பீடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனை சரி செய்ய நிறுவனம் எப்படியும் தன்னை தான் திரும்ப அழைக்கும் என எண்ணம் கொண்டிருந்திருக்கிறார். இதனை அடுத்து, அந்நிறுவனத்தின் சி.இ.ஓ அளித்த புகாரின் பெயரில், போலீசார், ஹேக் செய்த ஐ.பி முகவரியை வைத்துக்கொண்டு விசாரணை நடத்தியதில், விகேஷ் ஷர்மா தான் இதனை செய்தது என கண்டுபிடித்துவிட்டனர்.

இதனை அடுத்து, டெல்லி, பழைய மயூஜ்பூர் பகுதியில் வசித்து வந்த விகேஷ் ஷர்மாவை போலீசார் கைது செய்தனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

40 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் – டிஐஜி உத்தரவு.!

40 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் – டிஐஜி உத்தரவு.!

சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.   வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…

6 minutes ago

எல்லை தாண்டி பிடிபட்ட BSF வீரர்…திருப்பி அனுப்பிய பாகிஸ்தான்!

டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…

51 minutes ago

ராணுவ கர்னல் குறித்து சர்ச்சைப் பேச்சு – மன்னிப்பு கேட்ட விஜய் ஷா.!

டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…

52 minutes ago

மாணவர்களே அலர்ட்! 10ஆம் வகுப்பு தேர்வு ரிசல்ட் எப்போது தெரியுமா?

சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…

1 hour ago

உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் பி.ஆர்.கவாய்.!

டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…

2 hours ago

+2 துணை தேர்விற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! கடைசி தேதி இதுதான் மாணவர்களே..

சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…

2 hours ago