குற்றம் செய்யாதவர்கள் சிறை அனுபவத்தை பெறுவதற்காக, கர்நாடகா சிறைத்துறை ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது.
பொதுவாக குற்றம் செய்தவர்கள் தான் சிறையில் அடைக்கப்பட்டு, தண்டனை பெறுவர். ஆனால், குற்றம் செய்யாதவர்கள் சிறை அனுபவத்தை பெறுவதற்காக, கர்நாடகா சிறைத்துறை ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது.
அதன்படி, சிறைவாழ்வு குறித்து அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்காக கர்நாடகா சிறைத்துறை, ‘ஒரு நாள் சிறை கைதி திட்டம்’ என்ற திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளது. இத்திட்டப்படி, சிறை அனுபவத்தை பெற விரும்புவோர் ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும்.
இவர்கள் ஒருநாள் முழுவதும் சிறையில் அடைக்கப்படுவர். அவர்களுக்கு, கைதி சீருடை, கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு ஆகியவை வழங்கப்படும். குற்ற செயல்களுக்காக சிறைத்தண்டனை பெற்ற கைதிகளை போலவே இவர்களும் நடத்தப்படுவர்.
இத்திட்டத்தின் நோக்கம் என்னவென்றால், குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது, சிறை வாழ்க்கை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்றவை என சிறைத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இத்திட்டம் மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் செயல்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…