ஒரே நாடு ஒரே கல்வி வாரியம் அமைகிறதா??.!

Published by
kavitha
நாடுமுழுவதும் அனைத்து மாணவர்களுக்கும் சீரான கல்வியை வழங்க ஒரே நாடு ஒரே கல்வி வாரியம் என்கிற அமைப்பை நிறுவ மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி வழக்கறிஞரும்,பாஜக தலைவருமான அஸ்வினிகுமார் உபாத்யாய் சுப்ரீம் கோர்ட்டில்  பொது நல மனு  ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அவர் தாக்கல் செய்த மனுவின்  விவரம்:
நாடு முழுவதும் 6- 14 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் பொது பாடத்திட்டங்கள் மற்றும் பாடங்கள் கொண்ட சீரான கல்வியை வழங்க வேண்டும். இதற்காக என்று  இந்திய இடைநிலை கல்வி வாரிய சான்றிதழ் மற்றும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் ஆகியவற்றை இணைத்து ஒரே நாடு ஒரே கல்வி வாரியம் அமைக்கப்பட வேண்டும். இதற்கு என்று தேசிய அளவில் கல்வி கவுன்சில் என்கின்ற அமைப்பை உருவாக்க வேண்டும்.சமூக, பொருளாதார, சமத்துவம் மற்றும் நீதியை அடைவதற்கு தனியார் நிர்வகிக்கும் பள்ளிகள், மத்திய மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தால் நடத்தப்படும் பள்ளிகள் என எதுவாக  இருந்தாலும் அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் ஒரே பாடத்திட்டம் உருவாக்க மத்திய அரசிற்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அஸ்வினிகுமார் தாக்கல் செய்த இந்த மனு மீதான விசாரணை  சுப்ரீம் கோர்ட்டில் விரைவில்  விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Published by
kavitha

Recent Posts

இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!

இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!

சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…

1 hour ago

என்னை பத்தி ஏன் பேசுறீங்க? அன்புமணி பேச்சால் கடுப்பான மயிலாடுதுறை எம்.பி. சுதா!

சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…

2 hours ago

ஜெயலலிதாவுடன் உரையாடும் வாய்ப்பை பெற்றிருந்தது என்னுடைய கௌரவம்! பிரதமர் மோடி பதிவு!

டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது  பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…

3 hours ago

NZvBAN : தடுமாறிய பங்களாதேஷ்..தூக்கி நிறுத்திய ஜாகிர் அலி! நியூசிலாந்துக்கு வைத்த இலக்கு..

ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…

3 hours ago

தோல்வியை சந்தித்த விடாமுயற்சி…சீக்கிரம் ஓடிடிக்கு வந்த முக்கிய காரணம்?

சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…

4 hours ago

தவெக-வில் இணைகிறாரா காளியம்மாள்? அறிக்கையில் ‘இதை’ கவனித்தீர்களா?

சென்னை : சமீபகாலமாகவே சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. குறிப்பிட்டு…

5 hours ago