மத்திய பிரதேசத்தில் ஃபாரூக் கான் என்பவரின் வீட்டில் பாகிஸ்தான் தேசியக் கொடி ஏற்றப்பட்டதாகக் கூறப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
மத்திய பிரதேசத்தின் தேவாஸ் மாவட்டத்தில் உள்ள ஷிப்ரா கிராமத்தில் வசிக்கும் ஃபாரூக் கான் வீட்டின் மேல் நமது அண்டை நாட்டின் கொடியை ஏற்றி இருப்பதாக கூறப்படும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வந்தது. அந்த வீடியோவின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த இப்பகுதியில் சம்பந்தப்பட்ட வருவாய் ஆய்வாளர் லகன் சிங்கை அந்த இடத்திற்குச் சென்று உண்மையில் பாகிஸ்தான் கொடி இருக்கிறதா..? என்றுஆய்வு செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
வருவாய் ஆய்வாளர் லகான் சிங் கூறுகையில், வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிய பின்னர், இது குறித்து விசாரிக்க சென்றபோது, தன்னுடைய 12 வயது மகன் தெரியாமல் பாகிஸ்தானின் தேசியக் கொடியை ஏற்றியதாகவும் , அதைப் பற்றி அறிந்ததும் அவர் கொடியை அவிழ்த்துவிட்டதாகவும் கூறினார்.
கான்ஸ் இல்லத்தில் இருந்து பாகிஸ்தான் கொடி பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால், எங்கிருந்து கொடி கிடைத்தது என்பது குறித்து அவர் பதிலளிக்கவில்லை என லகான் சிங் கூறினார். இது குறித்து வருவாய் ஆய்வாளர் லகான் சிங் காவல்துறையிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஃபாரூக் கான் நேற்று மாலை ஐபிசி பிரிவு 153 ஏ கீழ் கைது செய்யப்பட்டார் என காவல்துறை தெரிவித்துள்ளனர்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…