மத்திய பிரதேசத்தில் ஃபாரூக் கான் என்பவரின் வீட்டில் பாகிஸ்தான் தேசியக் கொடி ஏற்றப்பட்டதாகக் கூறப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
மத்திய பிரதேசத்தின் தேவாஸ் மாவட்டத்தில் உள்ள ஷிப்ரா கிராமத்தில் வசிக்கும் ஃபாரூக் கான் வீட்டின் மேல் நமது அண்டை நாட்டின் கொடியை ஏற்றி இருப்பதாக கூறப்படும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வந்தது. அந்த வீடியோவின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த இப்பகுதியில் சம்பந்தப்பட்ட வருவாய் ஆய்வாளர் லகன் சிங்கை அந்த இடத்திற்குச் சென்று உண்மையில் பாகிஸ்தான் கொடி இருக்கிறதா..? என்றுஆய்வு செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
வருவாய் ஆய்வாளர் லகான் சிங் கூறுகையில், வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிய பின்னர், இது குறித்து விசாரிக்க சென்றபோது, தன்னுடைய 12 வயது மகன் தெரியாமல் பாகிஸ்தானின் தேசியக் கொடியை ஏற்றியதாகவும் , அதைப் பற்றி அறிந்ததும் அவர் கொடியை அவிழ்த்துவிட்டதாகவும் கூறினார்.
கான்ஸ் இல்லத்தில் இருந்து பாகிஸ்தான் கொடி பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால், எங்கிருந்து கொடி கிடைத்தது என்பது குறித்து அவர் பதிலளிக்கவில்லை என லகான் சிங் கூறினார். இது குறித்து வருவாய் ஆய்வாளர் லகான் சிங் காவல்துறையிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஃபாரூக் கான் நேற்று மாலை ஐபிசி பிரிவு 153 ஏ கீழ் கைது செய்யப்பட்டார் என காவல்துறை தெரிவித்துள்ளனர்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…