அஹிம்சையை அகிலத்திற்கு அளித்த (மகா)ஆத்மா!பிறந்ததினம்-பிரதமர் மரியாதை

Default Image

மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அடிமைப்பட்டு கிடந்த இந்தியாவின் விடுதலைக்கு  வித்திட்ட , இந்திய விடுதலைப் போராட்டத்தை சகிப்புத்தன்மை,அஹிம்சை வழியில் போராட்டம் நடத்தி சுதந்திரம் பெறுவதற்கு காரணமாக இருந்த தலைவர்களில் காந்தியின் பங்கு அதிகம்.மகாம்தா என்று அழைக்கப்படும் தேசதந்தை காந்தியின்  151-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி நாடு முழுவதும் காந்திக்கு   மரியாதை செலுத்தி வருகிறார்கள்.டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதற்கு முன்னதாக, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு  பிரதமர் மோடி தனது டுவிட்டரில் பக்கத்தில்   மகாத்மா காந்தியின் வாழ்க்கை மற்றும் உன்னத எண்ணங்களிலிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.  நேசத்திற்குரிய மகாத்மா காந்திக்கு நாம் தலைவணங்குவோம். காந்தியின் கொள்கைகள்   செழுமையான மற்றும் இரக்க குணமுள்ள  இந்தியாவை உருவாக்குவதில் பாபுவின் கொள்கைகள் நமக்கு வழிகாட்டுகின்றன” என்று  பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்