Lok Sabha election 2024 phase 2 [file image]
Lok Sabha election 2024 phase 2: 18வது மக்களவை தேர்தலின் இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல் ஏப்ரல் 26ம் தேதி நடைபெறுகிறது.
இந்தியா முழுவதும் ஏழு கட்டமாக நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலின் இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26ஆம் தேதி நடக்கிறது. முதல் கட்டமாக தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்தது.
கடந்த வாரம் வெள்ளிக்கிமை தமிழ்நாடு உட்பட 21 மாநிலங்களில் முதல் கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், இந்த வாரம் வெள்ளிக்கிமை (26ம் தேதி) இரண்டாம் கட்டமாக 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 89 தொகுதிகளில் மக்களவை தேர்தல் நடைபெற இருக்கிறது.
இதில், கேரளா மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. அதேபோல், கர்நாடக மாநிலத்தில் உள்ள மொத்தம் 28 தொகுதிகளில் முதல்கட்டமாக 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், மீதுமுள்ள 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெற இருக்கிறது.
1. அசாம் – 5 மக்களவை தொகுதிகள்
2. பீகார் – 5 மக்களவை தொகுதிகள்
3. சத்தீஸ்கர் – 3 மக்களவை தொகுதிகள்
4. ஜம்மு மற்றும் காஷ்மீர் – 1 மக்களவை தொகுதி (ஜம்மு)
5. கர்நாடகா – 14 மக்களவை தொகுதிகள்
6. கேரளா – 20 மக்களவை தொகுதிகள்
7. மத்தியப் பிரதேசம் – 7 மக்களவை தொகுதிகள்
8. மகாராஷ்டிரா – 8 மக்களவை தொகுதிகள்
9. மணிப்பூர் – 1 மக்களவை தொகுதி (வெளி மணிப்பூர்)
10. ராஜஸ்தான் – 13 மக்களவை தொகுதிகள்
11. திரிபுரா – 1 மக்களவை தொகுதி (கிழக்கு திரிபுரா)
12. உத்தரப் பிரதேசம் – 8 மக்களவை தொகுதிகள்
13. மேற்கு வங்காளம் – 3 மக்களவை தொகுதிகள்
சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…
சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…
மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…
பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…
டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…