ஐயோ.. கடவுளே..நாயை கொடூரமாக தாக்கிய பெண்…பதைபதைக்க வைக்கும் வீடியோ.!

Published by
பால முருகன்

ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள லிஃப்டில் ஒரு பெண் நாயை அடித்து துன்புறுத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து, விலங்குகள் நல அமைப்பான பீப்பிள் ஃபார் அனிமல்ஸ் தொண்டர்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து அந்த நாய்கள் மீட்கப்பட்டது.

போலீஸ் கொடுத்த தகவலின் படி,  செக்டர் 109 குர்கானில் அமைந்துள்ள ஒரு சொகுசு பகுதியில் ஒரு தந்தை-மகன் இருவரும் வெளிநாட்டு இனத்தைச் சேர்ந்த இரண்டு நாய்களை தங்கள் வீட்டு பனிப்பெண்ணை  வைத்து கவனித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், புதன்கிழமை, அந்த பெண்  விலங்குகளை பூங்காவிற்கு அழைத்துச் சென்று, பிளாட்டுக்கு திரும்பும் போது, அந்த இரண்டு  நாய்களில் ஒன்றை லிஃப்ட் தரையில் மூன்று முறை தூக்கி கொடூரமாக தாக்கியுள்ளார். இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதனையடுத்து, விலங்குகள் நல அமைப்பான பீப்பிள் ஃபார் அனிமல்ஸ் (பிஎஃப்ஏ) தொண்டர்கள் அளித்த புகாரின் பேரில் அந்த இரண்டு நாய்களும் மீட்கப்பட்டன.  இதற்கிடையில், PFA இன் உறுப்பினர் மஞ்சுநாத் காமத், இது விலங்குகளுக்கு எதிரான கொடுமை வழக்கு என்றும், காவல்துறையில் எழுத்துப்பூர்வமாக நாய்களின் உரிமையாளர்கள் புகார் அளிப்பார்கள் என்றும் கூறினார்.

மறுபுறம், “எங்களுக்கு இதுவரை எந்த புகாரும் வரவில்லை. எங்களுக்கு ஏதேனும் புகார் வந்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்”  என சமூகத்தின் குடியுரிமை நல சங்கம் (RWA) சம்பவம் பற்றிய எந்த தகவலையும் வெளியிட மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

17 சுரங்கபாதைகள்., நெருங்கிய பாதுகாப்பு படை! பாக். ரயில் கடத்தலின் தற்போதைய நிலை…

17 சுரங்கபாதைகள்., நெருங்கிய பாதுகாப்பு படை! பாக். ரயில் கடத்தலின் தற்போதைய நிலை…

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை இன்று…

3 hours ago

விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு எப்போது? என்னென்ன பாதுகாப்பு வசதிகள்?

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பை வழங்குவதாக…

5 hours ago

வெறிநாய் கடியால் பறிபோன உயிர்? கோவையில் தற்கொலை செய்துகொண்ட வடமாநில தொழிலாளி!

கோவை : அண்மைக்காலமாக தெருநாய் கடிபற்றிய செய்திகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு போதிய நடவடிக்கை…

5 hours ago

எக்ஸ் சைபர் அட்டாக் : “செஞ்சது இவங்க தான்?” உக்ரைனை சுட்டி காட்டிய மஸ்க்!

சான் பிரான்சிஸ்கோ : பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) நேற்று இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் இருந்து…

6 hours ago

400க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ரயில் ஹைஜேக்… பாகிஸ்தானில் உச்சக்கட்ட பதற்றம்.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா - பெசாவருக்கு ஜாபர் விரைவு ரயில் 450 பேருடன் சென்றது.…

7 hours ago

அடுத்த 2 மணி நேரத்திற்கு 24 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும்.!

சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

7 hours ago