இந்தியாவின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பின் 90 சதவீதம் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, உட்பட 8 மாநிலங்களில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக, சில தளர்வுகளுடன் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. மேலும் இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது.
இந்நிலையில், இந்தியாவின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பின் 90 சதவீதம் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, உத்தரப்பிரதேசம், குஜராத் ஆகிய 8 மாநிலங்களில் மட்டும் இருக்கிறது. அதுமட்டுமின்றி, மொத்த உயிரிழப்புகளில் 80 சதவீதம் 32 மாவட்டங்களில் இருக்கின்றன.
கொரோனா அதிகம் பாதித்த அந்த 8 மாநிலங்களுக்கு மொத்தமாக 21.3 கோடி N95 முகக்கவசங்களும், 1.2 கோடி பாதுகாப்பு உடைகள், 6.12 கோடி ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் அந்த அறிவிப்பில், கொரோனா பாதிப்புகளை முன்னரே அறிந்து இந்தியா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்தது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…